முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

நாக்பூர்,  சத்தீஸ்கர் பஸ்டர் பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ளது. அந்த பிராந்தியத்தில் நேற்று இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பர்கம் போலீஸ் நிலைய பகுதியில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஒரு மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இந்த தாக்குதலில்  சத்தீஸ்கர் ஆயுதப்படையினர், மாவட்ட  பாதுகாப்பு படையினர் , மற்றும் போலீசார் கூட்டாக தாக்குதல் வேட்டை நடத்தினார்கள்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் வைத்திருந்த ரைபிள்கள் மற்றும் இதர வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இந்திரா வதி ஆற்றை கடந்து பஸ்ட்நர் கணவாய் நோக்கி வந்த போது போலீசார் அவர்களை தாக்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்