முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் தற்கொலைத் தாக்குதல்: படையினர் 11 பேர் பலி

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

பாக்தாத்   - ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் தீவிரவாதிகள் மூவர் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 11 பேர் பலியாகினர்.  இது குறித்து அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறியதாவது,

 "சனிக்கிழமை காலை பாக்தாத்திலுள்ள பாதுகாப்பு படையினரின் சோதனை மையம் அருகே வண்டியில் வந்த மூன்று தீவிரவாதிகள் தங்கள் உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடி குண்டை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்தனர். இதில் 11 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்" என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ் அமைப்பும் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்