முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் : அமைச்சர் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை 35-வதுவார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேலும் 107 அம்மா உணவகங்கள் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. அம்மா உணவகங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அம்மா உணவகங்களை பல்வேறுமாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள்,அதிகாரிகள் நேரில் வந்து பார்த்துஉணவை சுவைத்து பார்த்துபாராட்டு தெரிவித்தனர்.

தங்களது மாநிலத்திலும் இதுபோன்று உணவகங்களை திறக்கப் போவதாகதெரிவித்து பல மாநிலங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. வெளிநாட்டவரும் இந்தஉணவகத்துக்கு வந்து உணவு அருந்திபாராட்டினார்கள். இதுபோன்று உலகம் முழுவதும் அனைவரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ள அம்மா உணவகங்கள் தொடர்ந்து இங்கு திறக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் ஏழை, எளியமக்கள், கூலி தொழிலாளர்கள்,ஆட்டோ டிரைவர்கள், சென்னையில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் உணவிற்காக பெரும் தொகை செலவழிக்கின்ற நிலை உள்ளது. அவர்கள் குறைந்த செலவில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு பொது மக்களிடம்அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது

அம்மா உணவகங்களில் ஒரு ரூபாய் இட்லி பிரபலமானது. காலை உணவாக இட்லி, பொங்கலும், மதியம் லெமன், சாம்பார் சாதம், தயிர் சாதம், இரவு சப்பாத்தி பருப்பு கடைசல் போன்றவை வழங்கப்படுகிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் சாம்பார், லெமன், கருவேப்பிலை சாதம் போன்றவை 5ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இரவில் 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதிகளில் உள்ள முதியவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு பயன்படுத்துகிறார்கள். அம்மா உணவகம் தரமான முறையில் உணவுகள் தயாரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

மருத்துவமனைகளில் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆரம்பிக்கப்பட்டஅம்மா உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததையடுத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டது. ராஜூவ் காந்திஅரசு மருத்துவமனை, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட7 இடங்களில் அம்மா உணவகங்கள்திறக்கப்பட்டன.மருத்துவமனைக்கு வரும்புற நோயாளிகள், அவர்களின்உறவினர்கள், உதவியாளர்கள் அம்மா உணவகத்தில் உள்ள உணவுகளை ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுகிறார்கள்.  இதனால் மேலும் 93 இடங்களில் அம்மா உணவகம் படிப்படியாக தொடங்கப்பட்டது.

தற்போது மாநகராட்சி வார்டுகளில் 293 இடங்களிலும் 7 அரசுமருத்துவமனைகள் என மொத்தம் 300அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேலும் 107 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்க மாநகராட்சி ஏற்பாடு செய்தது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இதற்காக பிரத்யேக கட்டிடங்கள் கட்டப்பட்டன.சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் புதிய அம்மாஉணவகங்கள் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட107 அம்மா உணவகங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதற்கான விழா 35-வது வார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் நேற்று  காலை நடந்தது. அமைச்சர்எஸ்.பி வேலுமணி புதிய அம்மாஉணவகங்களை திறந்து வைத்தார். இதையடுத்து அம்மா உணவங்களில் காலையில் இட்லி,பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் பொதுமக்கள் காத்து நின்று உணவை வாங்கி சாப்பிட்டார்கள். திறப்புவிழா நிகழ்ச்சியில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் லட்சுமி நாராயணன், கவுன்சிலர் டேவிட் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்