முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி அறங்காவலருக்கு முனைவர் பட்டம்: லண்டன் பாரம்பரிய தமிழ்ச் சங்கம் வழங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

திருப்பதி : திருப்பதி தேவஸ்தான அறங் காவலர் சதலவாடா கிருஷ்ண மூர்த்திக்கு லண்டனில் உள்ள உலக பாரம்பரிய தமிழ்ச் சங்கம் சார்பில் கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

திருமலை, திருப்பதி தேவஸ் தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி. இவர் திருப்பதி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாவார். தற்போது இவர் தொடர்ந்து 2-வது ஆண்டாக தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், திருப்பதியில் உள்ள இவரது அலுவலகத்தில், லண்டனில் உள்ள உலக பாரம்பரிய தமிழ்ச் சங்கம் சார்பில் முனைவர் பிரேமா பாண்டுரங்கன் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் தமிழ்ச் சங்கத் தலைவி சுலோசனா மோகன் ஆகியோர் இந்த கவுரவ பட்டத்தை சதலவாடா கிருஷ்ண மூர்த்திக்கு வழங்கினர்.

இவர் பக்தர்களுக்கு ஆற்றும் உதவி, மற்றும் ஏழைகளுக்கு செய்த பல்வேறு உதவிகளை கருத்தில் கொண்டு இந்த கவுரவ முனைவர் பட்டம் வழங்கப் பட்டதாக பிரேமா பாண்டுரங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்