முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மேலும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசின் எந்த மனுவையும் விசாரிக்கக் கூடாது எனவும் அந்த மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. காவிரிப் பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த இடைக்கால மனுவில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகம் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாதவரை, அம்மாநில அரசு தாக்கல் செய்யும் எந்த மனுவையும் விசாரிக்கக்கூடாது என்றும் தமிழக அரசின் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சுப்ரீம் கோர்ட் கடந்த 20-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், இம்மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காவிரியில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை மதிக்காமல், கர்நாடக அரசு கடந்த 23-ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். கர்நாடக அரசு இதேபோன்று நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது, சட்டத்திற்கு புறம்பானதாகும். எனவே, இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளை குவிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய நீர்வள ஆணையத்தின் உதவியோடு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றும், மனுவில் கோரப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றாதவரை, அம்மாநிலம் தாக்கல் செய்யும் எந்த மனுவையும் விசாரிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை, தாக்கல் செய்ய நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று தமிழக அரசின் இடைக்கால மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago