முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லை நிலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - காஷ்மீர் எல்லை நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். 

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், காஷ்மீர் எல்லை நிலவரம் குறித்து நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். உரி ராணுவ முகாம் மீது நடைபெற்ற தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து, அமைச்சர் கவலை தெரிவித்தார். ஊடுருவல் சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்