முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 18 பேர் பலி

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

பீஜிங் : சீனாவின் வடக்குப் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 பேர் பலியாகினர்.

வடமேற்கு சீனாவின் ஷிஷுயிஜான் நகரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சிறிய நிலக்கரி சுரங்கமொன்றில் தொழிலாளர்கள் 20 பேர் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்கள் மரணமடைந்ததாகவும், 2 பேரை காணவில்லை என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் காணாமல் போன இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நிலக்கரி சுரங்கத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மேம்பாடுகள் காரணமாக நிலக்கரி உற்பத்தி அதிகம் நடைபெறும் சீனாவில் சமீப காலமாக விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ள நிலையில், தற்போது இந்த விபத்து நடந்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்