முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் போரை விரும்பவில்லை: பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - இந்தியாவின் அதிரடி தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையில் பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவுடன் போரை விரும்பவில்லை ‘‘தாய்நாட்டை காப்போம்’’ என கூறி உள்ளார்.  பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைச்சரவையின் அவசர கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் கூட்டினார். இதில் எல்லை நிலவரம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேசினார்.

இந்தியாவின் அதிரடி தாக்குதல் விவகாரத்தில் அமைதியை உடைத்த நவாஸ் செரீப், இந்தியாவுடன் போரை விரும்பவில்லை என்று கூறிஉள்ளார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.நவாஸ் செரீப் பேசுகையில் ‘‘எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் நாம் நமது தாய்நாட்டை காப்போம். நமது பாதுகாப்பு படையினருடன் ஒட்டுமொத்த நாடும் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறது.’’ ‘காஷ்மீர், தேசப்பிரிவினையில் முடிவுக்கு வராத விவகாரம். அதை அப்படியே விட்டு விட முடியாது. இந்தியாவின் வன்கொடுமைகள், காஷ்மீரி மக்களின் பேரார்வத்தை ஒடுக்கி விட முடியாது. வறுமை, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நாட்டின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சமாதானம் அவசியம், ஆனால் பகைமை என்று வருகிறபோது, நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறினார். 

நவாஸ் செரீப் மேலும் பேசுகையில் ‘‘இந்தியா வலிய வந்து நடத்திய தாக்குதல், பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எந்த வடிவத்தில் இந்தியாவில் ஆக்கிரமிப்பு வந்தாலும், அதை முறியடிப்பதற்கு தலைமையும், பாகிஸ்தான் மக்களும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்’’ எனவும் கூறினார். பாகிஸ்தான் அமைச்சரவை பயங்கரவாதிகள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதை  நிராகரித்தது. மாறாக, இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்தாகவும் கூறியது.  மேலும், இரு தரப்பு உடன்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி, இந்தியா செயல்பட்டுள்ளதாக அமைச்சரவை குற்றம் சாட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்