எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று தங்களது பிரச்சாரத்தை துவக்கினர். சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டார்கள். தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19–ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் தேதி கடந்த 25–ம் தேதி அன்று மாலை அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே 26–ம் தேதி அன்று மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து அ.தி.மு.க. வேட்பாளர்களும் நேற்று மதியம் 2 மணி அளவில் பிரச்சாரத்தை துவக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதனை அடுத்து நேற்று அ.தி.மு.க வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கினர். கொளுத்தும் வெயிலில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகள், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது ஆகியவைகளை மக்களிடம் எடுத்து சொல்லி ஆதரவு கேட்டனர். ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் வேட்பாளருடன் சென்று ஓட்டு கேட்டார்கள். சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். மகிழ்ச்சியுடன் இரட்டை விரலை காட்டி அம்மாவுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று உறுதிபட கூறினார்கள். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டார்கள்.
சென்னை மாநகராட்சி 49-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க பெண் வேட்பாளர் ரஞ்சனி அங்குள்ள சஞ்சிவிராயன் கோவில் தெரு ஆஞ்சனேயர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். ராயபுரம் சஞ்சிவிராயன் கோவில் தெருவில் இருந்து புறப்பட்ட ரஞ்சனி, பாலுமுதலி தெரு, தாண்டவராயன் தெரு ஆகிய தெருக்களில் வீடு வீடாக சென்று முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையை சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர். பொதுமக்கள் அவரை வரவேற்று எங்கள் ஓட்டு உங்களுக்கே என்று உறுதியளித்தனர்.
இதே போல் ராயபுரத்தில் போட்டியிடும் யசோதா( 48), கிரேஸி( 50), இந்திரா (51), ஹேமலதா(52), கலியமூர்த்தி (53) ஆகியோர் தங்களது பிரசாரத்தை தொடங்கி வீடு வீடாக வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ராயபுரம் பகுதி செயலாளர் சி.பி.ராமஜெயம், வி.சிவா, வட்ட செயலாளர்கள் சி.லோகு, கே.எஸ்.மணி, இரா.மாறன், ஏ.சந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஆயிரம் விளக்கு 109 வார்டில் அ.தி.மு.க வேட்பாளரும் ஆயிரம் விளக்கு தொகுதி பேரவை செயலாளருமான வழக்கறிஞர் சதாசிவம் நேற்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அவருடன் வட்டசெயலாளர்கள் ராஜேஷ், கபிலன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.கவினர் கொடிகளுடன் திரண்டு சென்று வாக்கு சேகரித்தனர்.
63-வது வார்டு அ.தி.மு.க வேட்பாளரும் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான ரவிக்குமார் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நேற்று பிற்பகல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்குசேகரிப்பில் வட்டசெயலாளர்கள் வெள்ளை சாகுல் அமீது, என்.எம்.சாதிக்பாட்சா மற்றும் கோழிக்கடை மோகன், ஸ்டான்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க வேட்பாளர்கள் சென்ற இடங்களில் பேண்டு வாத்தியங்களுடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. வழியெங்கும் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் வண்ணப் புத்தகங்களாக அச்சிடப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதேபோல், மதுரையில் அ.தி.மு.க வேட்பாளர்கள், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கினர்.
அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்ட பகுதிகளான மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பிரச்சாரம் செய்தனர் .பிரச்சாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான், கே.மாணிக்கம், பா.நீதிபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மேலூர் சாமி, கே.தமிழரசன், மாவட்ட கழக நிர்வாகிகள், எஸ்.என்.ராஜேந்திரன், அம்பலம், பஞ்சம்மாள், ஒன்றிய கழக செயலாளர்கள் சோமாசி, வெற்றிச்செழியன் மற்றும் சரவணன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 88வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஜெ.ராஜா, 23 வார்டில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் கு.திரவியம், 15 வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கிரம்மர்சுரேஷ், 63-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அழகு சித்ரா ரமேஷ் ,100வது வார்டில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் பி.கருப்புசாமி ஆகியோரை ஆதரித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பிரச்சாரம் செய்தார். இப்பிரச்சாரத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சி.தங்கம், பகுதி செயலாளர்கள் பூமிபாலகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, எம்.ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.