முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் கொடுத்த பிஎம்டபிள்யூ காரை திருப்பி கொடுக்க தீபா கர்மாகர் முடிவு!

புதன்கிழமை, 12 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

திரிபுரா : தன்னுடைய மாநிலத்தின் ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளதால், சச்சின் கையால் பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை திருப்பி கொடுக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் முடிவு செய்திருக்கிறார்.

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் நான்காவது இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தீபா கர்மாகர். ஐதாராபாத் பேட்மிண்டன் சங்கத்தலைவர் சாமுண்டேஸ்வரநாத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருடன் தீபா கர்மாகருக்கும் சேர்த்து பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்தார். இந்த பரிசை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார்.

இந்நிலையில் சச்சின் கையால் பரிசாகப் பெற்ற பிஎம்டபிள்யூ காரை திருப்பிக் கொடுக்க தீபா கர்மாகர் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது தந்தை துலல் கர்மாகர் "நாங்கள் வசிக்கும் அகர்தலா பகுதியின் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் இந்த காரை சரிவர பராமரிக்க முடியவில்லை. அதனால் இந்தக் காரை கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒரு காரை வாங்க முடிவு செய்திருக்கிறோம்.

மேலும், இந்த பகுதியில் காரை ஓட்ட முடியவில்லை என்று ஐதாராபாத் பேட்மிண்டன் சங்கத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து, காருக்கு பதிலாக பணமாகக் கொடுத்து விட முடியுமா? என்று கேட்டோம். அவர்களும் தருவதாக ஒப்புக் கொண்டனர். தற்போது அந்த பணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்