முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி: சொல்வது தென்கொரியா ராணுவம்

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

சியோல்  - வடகொரிய அரசு சமீபத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.  இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) தென்கொரிய ராணுவம் தரப்பில் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது, "வடகொரியாவின் குசாங் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான இந்த சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை வடகொரியாவுக்கு தோல்வியைத் தந்திருக்கிறது. வடகொரியாவின் சோதனை குறித்து ஆய்வு செய்ய தென்கொரியாவுக்கு நேரம் தேவைப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.  வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே தோல்வியடைந்ததாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சரும் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்