முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 தொகுதி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி: ஜி.கே.மணி அறிவிப்பு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கட்சி தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டது. அந்த கட்சியின் முதல்- அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டது.ஆனால் தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  கட்சிகள் வேட்பாளர்களை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. பா.ம.க.வை பொறுத்தவரை கடந்த தேர்தல் போலவே இந்த 3 தொகுதி தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்