முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அமைச்சரவை கூட்டம் நிதியமைச்சர் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் செப்டம்பர் 22-ம் தேதி நள்ளிரவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு டாக்டர் குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. இந்தக் கூட்டத்துக்கு நிதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். மழைகாலத்தில் எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக மற்றும் காவிரி விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் 24-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன், தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்