எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் என்று அ.தி.மு.க. மற்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவர்களும், மருத்துவ நிபுணர் குழுவினரும், முதல்வரின் உடல்நிலையையும், சிகிச்சையையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். முதல்வர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், மிகவிரைவில் பூரண உடல்நலத்துடன் வீடுதிரும்பி, மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை முன்பு அவர் கூறியதாவது:-
அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் உதவியுடன், முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வருகிறார். விரைவிலேயே அவர் வீடு திரும்புவார். தனது வாழ்க்கை முழுக்க தமிழக மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தவர் முதல்வர் ஜெயலலிதா.
தற்போது டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையில் ஓய்வில் மட்டும்தான் உள்ளார். அவர் தற்போது முழுக்க குணமடைந்து விட்டார். முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பிய பிறகு மேலும் பல நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிவிப்பார். இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான ஹெச்.வி.ஹண்டே, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். இன்னும் ஒரு வாரத்திற்குள் முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பிவிடுவார் என ஹண்டே தெரிவித்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் தேறிவருவதாகவும், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி கழகப் பணிகளையும், அரசுப் பணிகளையும் மேற்கொள்வார் என்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், தொழுகைகளும், பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருந்திரளான அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சென்னை தங்க சாலையில் இருந்து ராயபுரம், வண்ணாரப்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வழியாக கழகத்தினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பச்சை வண்ண ஆடை உடுத்தி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு, பாதயாத்திரையாகச் சென்றனர். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, மனமுருக சிறப்பு வழிபாடு நடத்தினர். தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில், சென்னை அடையாறில் உள்ள அனந்தபத்மநாபன் சுவாமி ஆலயத்தில், லலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், தங்கத் தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர்.
இதேபோல், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திலும் தங்கத் தேர் இழுத்து அ.தி.மு.க.வினர் மனமுருக பிரார்த்தனை செய்தனர். பெரம்பலூர் ஒன்றியக் கழகம் சார்பில், ஆவின் பாலகம் அருகே அமைந்துள்ள சித்தர் கோயிலில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகச் சென்று மதனகோபால சுவாமி கோயிலில் பாலாபிஷேம் செய்து வழிபாடு செய்தனர்.
கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இளமங்கலம் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி திருக்கோயிலில் மூலிகை பொருட்கள் மற்றும் பழங்களைக் கொண்டு ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம் மற்றும் கோ பூஜை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பரங்கிமலை ஒன்றியக் கழகம் சார்பில், மேடவாக்கம் வினை தீர்க்கும் வேலவர் திருக்கோயிலில் விநாயகருக்கு தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாட்டில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகர அ.தி.மு.க. சார்பில், கவுண்டம்பட்டி, மேட்டுத்தெரு, வெள்ளாண்டிவலசு ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் கணபதி ஹோமம், ஆயுஸ் ஹோமம் உட்பட 6 வகையான ஹோம வழிபாடுகள் நடைபெற்றன. இதில், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், காரத்தொழுவில் உள்ள அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. திண்டுக்கல்லில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 108 நன்மைதரும் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பெண்கள் விளக்கு பூஜை செய்தும் வழிபாடு மேற்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்டம் பட்டீஸ்வரம் ஊராட்சிக் கழகம் சார்பில், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பொங்கலிட்டு, நெய்தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், ஸ்ரீபெரியாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தும் பொங்கல் வைத்தும் அ.இ.அ.தி.மு.க.வினர் வழிபட்டனர். தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தில், 108 மூலிகைகளைக் கொண்டு நடைபெற்ற சிறப்பு யாகத்தில், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை சோழவந்தான் நகர அ.தி.மு.க. சார்பில், பரளயநாத சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர். திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் உள்ள ராஜ கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சி.எஸ்.ஐ. மத்திய பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு ஜெபம் செய்து கழககத்தினர் மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டனர்.
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், உதகை பாறை முனிஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதானைகள் நடைபெற்றன.
நாகை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஸ்ரீவித்யா மஹாமேரு பீடத்தில் நடைபெற்று வந்த யாகத்தின் 5-வது மற்றும் இறுதி நாளான நேற்று, 336 வகையான மூலிகைகள், 60 வகையான பழங்கள், 500-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு பூர்ணாகுதி நடைபெற்றது. 2,500 பேருக்கு புடவைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில், திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை ஒன்றியக்கழகம் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. ஏராளமானோர் கலந்துகொண்டு மனமுருக வேண்டினர். திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மன்னார்குடி மனவளக்கலை மன்றத்தில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று குத்து விளக்கேற்றியும், 108 முறை மந்திரங்களை உச்சரித்தும் மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், மன்னார்குடி வேதாந்திரி மகரிசி கோயிலில், சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு சார்பில், எண்ணூரில் உள்ள சிவா விஷ்ணு திருக்கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஈரோடு புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், பெருந்துறை ஸ்ரீவரசக்தி விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், கள்ளிக்கோட்டை அரசன்மகன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.