முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சு வார்த்தைக்கு பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட வேண்டும்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், பேச்சு வார்த்தை நடத்த  பாகிஸ்தான்  தீவிரவாதத்தை கைவிடவேண்டும் என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி கூறினார்.

 இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மாநிலம் ஆகும். அந்த மாநில எல்லையின் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி காஷ்மீரில் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அரசும் , அந்த நாட்டு ராணுவமும் உதவி செய்து வருகிறது. தீவிரவாதத்தை தூண்டி இந்தியாவில் பதட்டத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையாக எச்சரிக்கை தருவதுடன் பதிலடியும் தந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று காஷ்மீரின் டிரால் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கொல்ல ப்பட்ட மறுநாளில் இருந்து, காஷ்மீரில் பிரிவினை வாதிகள் வன்முறை போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பதுடன் தீவிரவாதி புர்கான் வானி ,தியாகி என்றும் அவரது இறப்பு நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார்.

தீவிரவாதிகளுக்கு துணை போகும் அவரது நடவடிக்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி தருவோம் என்றும் இந்தியா அறிவித்தது. பிரிவினை வாதிகள் போராட்டத்தால் கடந்த இரண்டரை மாதமாக பதட்டம் நிலவும் காஷ்மீரில் அமைதி திரும்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா நேற்று  கூறியதாவது,

  தற்போதைய சூழ்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை நடத்த சாத்தியமில்லை. பேச்சு வார்த்தைக்கு பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட வேண்டும். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளன. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு முக்கியமாக உள்ளது. நமது பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்று அந்த நாட்டின் பிரதமர்  நவாஸ் ஷெரீப்பை சந்தித்து தீவிரவாதத்தை பாகிஸ்தான் துணை போகக்கூடாது என வலியுறுத்தினார். ஆனால் அந்த நாடு அப்படி நடந்து  கொள்ளவில்லை.  தீவிரவாத அச்சுறுத்தலில் பாகிஸ்தானும் சிக்கிக்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago