எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், தொழுகைகளும், பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருந்திரளான அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திருநின்றவூரிலுள்ள சிவ விஷ்ணு திருக்கோயிலில், விநாயக பெருமானுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருமங்கலம் வெல்கம் காலனியிலுள்ள C.S.I. நேசமேய்ப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பெருமாச்சேரியில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத விருப்பாட்சீஸ்வரர் கோயிலில் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. அன்னதானமும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் ஆயிரத்து எட்டு தேங்காய்கள் உடைத்தும், தேர் இழுத்தும் கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், நன்மங்கலம் ஊராட்சிக் கழகம் சார்பில், ஆயிரத்து 68 பெண்கள் குத்து விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், பொன்விநாயகர் கோயிலில் இருந்து 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் முத்துராமலிங்க விநாயகருக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து அவர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், கழுகாசலமூர்த்தி கோயிலில், பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியக் கழகம் சார்பில், பருவதனஅள்ளி தர்காவில் சிறப்பு துவா நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சார்பில், அங்குள்ள மாரியம்மன் கோயிலில், பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி பேரூராட்சி அ.இ.அ.தி.மு.க சார்பில், கும்பத்து மாரியம்மன் கோயிலில், 108 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதேபோல் ராசிபுரம் தொகுதி பிள்ளாநல்லூர் பேரூராட்சிக் கழக மகளிரணி சார்பில், மாரியம்மன் கோயிலில், 108 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
தேனி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீமங்களநாயமி சமேத ஸ்ரீவாஞ்சிநாத ஆலயத்தில், ஸ்ரீநவக்கிரக சாந்தி, ஸ்ரீதன்வந்திரி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் சக்ஸரநாம அர்ச்சனையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியம் சார்பில், ஒலக்கோடு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி பொங்கல் வைத்து, கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்டம் அ.இ.அ.தி.மு.க. சார்பில், பாபநாசம் அருகே உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில், ஏராளமான பெண்களும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
கும்பகோணம் நகர 25-வது வார்டு சார்பில், ஸ்ரீதீபாஞ்சியம்மன் ஆலயத்தில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை நகர கழக மாணவரணி சார்பில், ஐஸ்வர்யபிள்ளை மாரியம்மன் கோயிலில் ஆயிரத்து எட்டு அகல் விளக்கேற்றி கழகத்தினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
திருச்சியில் மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர்.
வேலூர் மேற்கு மாவட்டக் கழக விவசாயப் பிரிவு சார்பில், ஆம்பூரில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், குடியாத்தம் அருகே செதுக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
வேலூர் கிழக்கு மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றிய கழகம் சார்பில், ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் கோ பூஜையும், சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ஒன்றியக் கழகம் சார்பில் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்கத்தேர் இழுத்தும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
பழனி மலைக்கோயிலில் தேனி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், சிறப்பு பூஜை செய்தும், தங்கத்தேர் இழுத்தும் கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், சக்திவேல் முருகன் கோயிலில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில், கள்ளக்குறிச்சி மந்தக்கரை பகுதியில் உள்ள மஸ்ஜிதேயா நசீப் பள்ளிவாசலில், மலர்போர்வை போர்த்தி சிறப்பு தொழுகை மேற்கொள்ளப்பட்டது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்களும் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் திருமருகள் ஒன்றிய கழகம் சார்பில், திருச்செட்டாங்குடி உத்திபுரிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், அதிசய விநயாகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மனமுருக வழிபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: