முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு முதல்நாள் பலத்த மழைக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வட கிழக்குப் பருவ மழை தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தீபாவளிக்கு முதல் நாள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவே தமிழகத்தில் குறித்த நேரத்தில் பருவ மழை தொடங்கவில்லை என்று வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் தீபாவளிக்கு முதல் நாள் தமிழகத்தில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

அதுவரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தீபாவளிக்கு முன்பாக வட கிழக்குப் பருவ மழை தொடங்கி வெளுத்தெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் வட கிழக்குப் பருவ மழை தாமதமாக தொடங்கி வெளுத்துக் கட்டியது என்பது நினைவிருக்கலாம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்