முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : தயாநிதிமாறன், கலாநிதிமாறன் கோர்ட்டில் ஆஜர்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலாநிதிமாறனின் மனைவி காவேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததாகவும், இதற்கு பிரதிபலனாக சன் குழுமத்திற்கு 743 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டதாகவும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளன.

இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான விசாரணை தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன், கலாநிதிமாறனின் மனைவி காவேரி ஆகியோர் கூட்டாக சதி செய்து சன் தொலைக்காட்சி குழுமத்திற்கு 743 கோடி ரூபாய் ஆதாயம் பெற்றதற்கான ஆவணங்களை எடுத்துக்காட்டி சி.பி.ஐ. வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஏற்கெனவே வாதிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் வழக்கில் குற்றம்சாட்யடப்பட்டுள்ள கலாநிதிமாறனின் மனைவி காவேரி ஆஜராகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்