முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு இந்திய ஜவான் பலி

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு இந்திய ஜவான் பலியானார். இதானல் இந்திய எல்லையில்  பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பதிலடி தந்து வருகிறார்கள். 48 மணி நேரத்தில் இரண்டவது இந்திய ஜவான் பலியானார். ஏற்கனவே குர்னாம் சிங் என்ற வீரர் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் இறந்தார். தற்போது சுசில் குமார் என்ற வீரர் இறந்துள்ளார். அவரது மறைவுக்கு உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்முவின் ஆர்.எஸ்.புராவில், பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தலைமை காவலர் சுசில் குமார் (47) படுயாகம் அடைந்தார். அவர் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவனைக்கு வேகமாக கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர்  குண்டு காயம் காரணமாக, அவர் பலியானார். மரணம் அடைந்த ஜவான் குமார்  ஹரியானாவின் குருஷேக்த்ராவை சேர்ந்தவர். அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர் நிறுத்தம் மீறி  நடத்திய துப்பாக்கிசூட்டில்  இரண்டாவது வீரர் பலியாகியுள்ளார். ஏற்கனவே ஜம்முவில் சர்வ தேச எல்லை(ஐ.பி.) பகுதியில் ஒரு ஜவான் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானார்.

  சர்வ தேச எல்லை பகுதி  192 கி..மீ தூரம் உள்ளது. அந்த பகுதியில், இந்திய ராணுவம் கடந்த மாதம் 29ம் தேதியன்று அதிரடி தாக்குதலை நடத்தியதைத்தொடர்ந்து  பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாட்டம் இன்றி அங்கு அமைதி நிலை இருந்தது. இருப்பினும் , அங்கு, பாகிஸ்தான் வீரர்கள் நடத்தும் தாக்குதலால்  தற்போது பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

 ஏற்கனவே ,கதுவா மாவட்டத்தின் ஹிரா நகர் செக்டார், பாபியா பகுதி, சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய நிலைகள் மீது அக்டோபர் 21-ம் தேதியன்று பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. சிறிய மற்றும் தானியங்கி ஆயுதங்கள், 82 மி.மீ. பீரங்கிக் குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 15 நிமிடங்கள் நீடித்தது. இதில் குர்னாம் சிங் என்ற பிஎஸ்எப் வீரர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர், நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்