முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : பலியான பாதுகாப்பு படை வீரருக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஜம்மு - காஷ்மீர் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.  ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ். புரா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூட்டில், எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் சுஷில் குமார் (47) பலத்த காயமடைந்தார். ஜம்மு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்ரா பகுதியைச் சேர்ந்த சுஷில் குமாருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ராஜ்நாத் சிங் அஞ்சலி
இந்நிலையில், பஹ்ரைனில் இருந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''ஆர்.எஸ். புரா பகுதியில் நடந்த சண்டையில் தன் உயிரை நீத்த எல்லைப் பாதுகாப்பு வீரர் சுஷில் குமாரின் தைரியத்துக்கும், தியாகத்துக்கும் என்னுடைய வீர வணக்கங்கள். எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநரிடம் எல்லைப் பகுதிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்தேன். பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க பிஎஸ்எப் எப்போதும் தயாராக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்