எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - நாட்டின் எல்லைகளைப் பாது காத்து வரும் நமது ராணுவ வீரர்களுக்கு, பொதுமக்கள் தீபாவளி வாழ்த்துகளை அனுப்ப வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பதான்கோட் மற்றும் உரி ராணுவ முகாம்கள் மீது பாகிஸ் தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீருக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு வீரர்களுக்கு நாட்டு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எல்லையில் உள்ள நமது வீரர்களுக்கு தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை அனுப்ப நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 125 கோடி மக்கள், எல்லையில் உள்ள வீரர்களுக்கு ஆதரவாக இருந்தால் அவர்களுடைய பலமும் 125 கோடி மடங்காக அதிகரிக்கும். இந்த மகிழ்ச்சியான தீபாவளி நேரத்தில் நமது வீரர்களுக்குப் பொது மக்கள் வாழ்த்து செய்தி அனுப்ப வேண்டும். அதை ‘MyGov.in’ அரசு இணையதளம் மூலம் #Sandesh2Soldiers’ என்ற தலைப்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பலாம்.
இந்த வாழ்த்துச் செய்தியை நமது வீரர்களுக்கு அனுப்பிவிட்டேன். நீங்களும் அதுபோல் செய்யலாம். அத்துடன் அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றின் மூலமும் பொதுமக்கள் தங்கள் வாழ்த்து செய்திகளை எல்லையில் உள்ள வீரர்களுக்கு அனுப்பலாம். மக்களின் உணர்வுகளை இவை இரண்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் ராணுவ வீரர்களுக்குக் கொண்டு செல்லும்.
உங்கள் வாழ்த்துகள் நமது வீரர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்யும். இந்த தீபாவளி நேரத்தில் துணிச்சலான வீரர்கள் நமது நாட்டைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பது நினைத்துப் பார்ப்போம்.
ஜெய் ஹிந்த். இவ்வாறு பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வீரர்களுக்குத் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் அடங்கிய சிறப்பு வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட சில மணி நேரங்களில் ட்விட்டர், முகநூல்களில் அந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நரேந்திர மோடி ஆப் மூலம் வீரர்களுக்குத் தங்கள் வாழ்த்து செய்திகளையோ அல்லது கையால் எழுதியோ பொதுமக்கள் அனுப்பலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள வீரர்களுடன்தான் பிரதமர் மோடி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த தொகுதி வாரணாசிக்கு மோடி இன்று பயணம் நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, 8-வது முறையாக தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களை இன்று சந்திக்கிறார்.
உ.பி. மாநிலம் வாரணாசிக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘உர்ஜா கங்கா’ எரிவாயு குழாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அடுத்த 2 ஆண்டுகளில் வாரணாசி மக்களும், அடுத்த ஓராண்டில் பிஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்களும் சமையல் எரிவாயு இணைப்பை குழாய் மூலம் பெற இத்திட்டம் வழிவகை செய்யும்.
இதுதவிர, அலகாபாத்-வாரணாசி ரயில் தடத்தில் இருவழிப்பாதை திட்டத்துக்கும், டீசல் இன்ஜின் பணிமனை விரிவாக்கம் மற்றும் சரக்கு மையத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருவது, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.