முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கண்ணீர்!

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

லக்னோ : சமாஜ்வாடி கட்சியை உடைத்து தனிக்கட்சியை தாம் தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் பொய் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ் தமது சித்தப்பா சிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். இதனால் சமாஜ்வாடி கட்சிக்குள் குழப்பம் வெடித்துள்ளது. அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முலாயம்சிங் யாதவ் லக்னோவில் கூட்டினார். அக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

எனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சதி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சதி குறித்து விசாரிக்கப் போகிறேன். சமாஜ்வாடி கட்சியை உடைத்து தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்.என்னை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்திருப்பதாக அறிந்த போது மிகவும் காயப்பட்டுப் போனேன்.  முலாயம்சிங் யாதவ் விரும்பினால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார். அரசியல்தான் என்னுடைய வாழ்க்கை. தற்போது அரசியலைவிட்டு என்னை விலக்கி வைத்தால் நான் எதிர்காலத்தில் என்ன செய்வேன்?  இவ்வாறு அகிலேஷ் யாதவ் கண்ணீர்மல்க பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்