முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய மருத்துவமனையில் தீ: 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் பலி

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர் : மலேசியாவில் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நிகழ்ந்த தீ விபத்தில் 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜோஹார் பாருவில் சுல்தானா அமினா அரசு மருத்துவமனை உள்ளது. இதன் 2-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவ மனையில் இருந்த நூற்றுக் கும் மேற்பட்ட நோயாளி கள் பாதுகாப்பான இடத் துக்கு அப்புறப்படுத்தப் பட்டனர்.
எனினும் இந்த தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 நோயாளிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேர் 50 வயது மதிக்கத்தக்க பெண்கள் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.  தீ விபத்து குறித்து அரசு முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்