முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கவனமாக பார்த்து வாங்க வேண்டும்: மக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பொதுமக்கள், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பெறும்போது, அவை நல்ல நோட்டுகள்தானா என்பதை கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.  கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பெறும்போது, அவை நல்ல நோட்டுகள்தானா என்பதை கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
சமூக விரோதிகள் சிலர், எளிதாக மக்களை ஏமாற்றும் வகையில்,

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால், நல்ல ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. மேலும், நல்ல ரூபாய் நோட்டுகளுக்கான அடையாளங்கள் குறித்த விரிவான தகவல்கள் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் உள்ளதாகவும், இந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்