முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க வுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின் காரணத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக இருந்த சில பணியிடங்களுக்கான நேர்முத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் தலைமை பொறியாளர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 25 சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர், 25 இளநிலை தணிக்கையாளர் மற்றும் 50 உதவி வரைவாளர் பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு வருகின்ற நவம்பர் 2, 4, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று இணையதளம் மூலம் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேதி களில் நடைபெறவிருந்த நேர் முகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றது. நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி வரும் நவம்பர் 19-க்கு பிறகு தெரிவிக்கப்படும். தேர்வர்கள், ஏற்கெனவே இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்பு கடிதம் மற்றும் சரிபார்க்கும் பட்டிய லையே, புதிய தேதியில் நடைபெறும் நேர்முகத் தேர்வின் போது எடுத்து வர வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்