முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் ‘முதலை’ புயல்: பலத்த மழை பெய்யும்

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, வங்க கடலில் உருவான ‘முதலை’ புயல் ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு 9 மணி முதல் இந்த புயல் படிப்படியாக வலு இழந்து காற்றழுத்த மண்டலமாக மாறியது.

அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுஇழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறுகிறது. தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 240 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து 260 கி.மீ. தொலைவிலும், நெல்லூரில் இருந்து 390 கி.மீ. தொலைவிலும் கடலில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வட தமிழகத்தை நோக்கி மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். தீபாவளி தினமான நாளை வட மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மழை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, கோவை போன்ற உள் மாவட்டங்களில் 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்