முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் வித்யா சாகர் ராவ் தீபாவளி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிகரமான பசுமை நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தீபஒளி மகிழ்ச்சியையும், செல்வ வளமையையும் சுட்டிக் காட்டுகிறது. தீப ஒளிகளின் திருவிழா நல்ல வலிமையுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இறைதன்மையுள்ள ஒளி அறியாமையால் ஏற்படும் இருளை அகற்றி அனைத்து துறைகளிலும் வெற்றி, ஒற்றுமை, ஆரோக்கியம் மற்றும் மேம்பாட்டை உருவாக்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான பசுமை நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களை இதய பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்