முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை 15-ம் தேதி திறப்பு

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் : மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் (16-ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகிறது. 15-ம் தேதி மாலை 5 மணிக்கு, தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி கோயில் நடையை திறக்கிறார்.

பின்னர் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட நம்பூதிரிகள் உன்னிகிருஷ்ணன் (சபரிமலை) மற்றும் மனுகுமார் (மாளிகைபுரம்) பொறுப்பேற்கும் சடங்குகள் நடைபெறுகிறது. மறுநாள் (16-ம் தேதி) முதல் மண்டலகால பூஜைகள் தொடங்குகின்றன. 16-ம் தேதி வரை கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

டிசம்பர் 26-ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். 3-ம் நாள் இடை வெளிக்கு பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். அடுத்த வருடம் ஜனவரி 14-ம் தேதி மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்