எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண்ணை இமை காப்பது போல் மதுரை மக்களை காக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது (கோ-கடவுள்: இல்-வீடு) அதாவது கடவுளின் வீடு இந்திர பதவியை அடைவதற்காக கடும்தவம் செய்து கொண்டிருந்த விஸ்வரூபன்-விருத்திகாசுரர் ஆகிய அசுரர்களை தேவேந்திரன் கொன்றான். இதனால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) தேவர்க்கதிபதியைப் பற்றியது.
கேதாரம், காசி, காஞ்சி முதலான பல ஷேத்திரங்களாலும் தீராத தோஷம் கடம்பவன சொக்கலிங்கப் பெருமானால் தீர்ந்தது. இதனால், மகிழ்வுற்ற தேவேந்திரன், தேவதச்சர்களின் தலைவனான மகாசிற்பி மயனைக் கொண்டு கோயில் அமைத்து கடம்பவன மதுரையிலேயே சொக்கலிங்க வடிவில் ஈசனை வழிபட்டான். அந்த நாளிலே மணவூரைத் தலைநகராகக் கொண்டு நாட்டை ஆண்டு வந்த குலசேகர பாண்டிய மன்னன், தனஞ்செயன் என்ற வணிகனால் கடம்பவனத்திலுள்ள சொக்கேசனின் கோயிலைப் பற்றி அறிந்து சென்று வணங்கினான்.
நள்ளிரவில் இந்திரன் முதல் தேவர்கள் எல்லாரும் வந்து வணங்கிச் செல்லும் அந்தக் கோயிலை ஆகம விதிப்படி அற்புதக் கோயிலாக உருவாக்கினான். நாற்புறமும் எட்டு யானைகள், 32 சிங்கங்கள் 64 சிவகணங்கள் தாங்கும் இந்திரவிமானக் கோயில் அது.
அன்னையின் அவதாரம்:- குலசேகர பாண்டியனின் வழித் தோன்றலான மலையத்துவஜ பாண்டியன் பாண்டிய நாட்டை ஆள்கிறான். இவனது மனைவி காஞ்சனமாலை சோழமன்னனின் மகள். இவள் முற்பிறவியில் மீனாட்சியம்மையைப் பிரார்த்தித்து அம்மனையே மகளாக அடையும் வரத்தைப் பெற்றிருந்தாள். மலையத்துவஜன் - காஞ்சனமாலை தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் இவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினர். அந்த யாகத்தீக்குள்ளிருந்து மூன்று வயதுச் சிறுமியாக ஈஸ்வரி மீனாட்சி உருவில் நடந்து வந்து காஞ்சன மாலையின் மடியில் அமர்ந்து “அம்மா” என்றாள்.
யாகத்தின் மூலமாகக் கிடைத்த தெய்வீகக் குழந்தைக்கு மார்புக் காம்பு அடையாளங்கள் மூன்று இருந்தன. இதைக் கண்டு அரச தம்பதி அதிர்ந்தனர். மன்னா வருந்தாதே இக்குழந்தைக்கு ‘தடாதகை’ என்று பெயரிட்டு வளர்த்துவா!. பருவவயதில் அவள் தனக்கேற்ற கணவனைக் காண்பாள். அப்போதே மூன்றாவதாக உள்ள தனம் மறைந்துவிடும்” என்று அசரீரி ஒலித்தது.
ஆயகலைகள் அனைத்திலும் தேர்ந்து கன்னி பருவமெய்திய தடாதகைக்கு மன்னன் மணிமுடி சூட்டி அரசியாக்கிவிட்டு சில தினங்களில் சிவலோக பதவியடைந்தான். அரசி தடாதகைப்பிராட்டி திக்விஜயம் செய்தாள். ஐம்பத்தியாறு தேச மன்னர்களையும், அஷ்டதிக்குப் பாலகர்களையும் பணியச்செய்தாள். கயிலாயத்திற்கே படை நடத்திச் சென்றபோதுதான் அந்த அதிசயம் நடந்தது. அங்கே தனக்கேற்ற மணாளனைக் கண்டாள். ஈசனைப் பார்த்ததும், இயல்புக்கு மாறாக இருந்து வந்த மூன்றாவது தனம் மறைந்துவிட்டது.
சுந்தர பாண்டியனாக மதுரைக்கு வந்தார். சொக்கேஸ்வரன். மீனைப் போன்று விழிமூடாது பக்தர்களைக் காக்கும் கீர்த்தியைப் பெற்றதால் மீனாட்சி என்ற பெயர் பெற்ற தடாதகைக்கும் சுந்தரேச பாண்டியருக்கும் திருமணம் நடந்தது. மீனாட்சி-சௌந்தர பாண்டியனாக மதுரையை ஆண்ட தெய்வீகத் தம்பதிகள் முருகனின் அம்சமாக உக்கிரபாண்டியனை மகனாகப் பெற்று சகல கலைகளையும் அவனுக்குப் பயிற்றுவித்து. தக்க பருவத்தில் காந்திமதியை மணம் செய்து வைத்துவிட்டு அவனுக்கு பட்டம் சூட்டி வேல்வளை, செண்டு ஆகியவற்றை ஆட்சிக்கருவியாகத் தந்து ஆசிர்வதித்து விட்டு சொக்கலிங்கத்துள் ஐக்கியமாகி மறைந்துவிட்டனர்.
திருவிளையாடல்கள்:- உக்கிர பாண்டியனும் நீதி வழுவாது ஆட்சிபுரிந்தான். அவனுக்கு பின் வந்த பாண்டிய மன்னர்களும் சிறப்பாகவே நாட்டை ஆண்டனர். இவர்கள் ஆண்ட காலத்தில் சிவன் சித்தனாகவும், புலவனாகவும். வேதியனாகவும், மீனவனாகவும், வளையல் செட்டியாகவும் அவதாரமெடுத்து அவ்வப்போது மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார்.
அன்னை மீனாட்சியால் நடந்த அற்புதங்களோ ஏராளம். கல்யானையை கரும்பு தின்னச் செய்து ஆங்கிலேய கலெக்டரின் உயிரை சிறுமி வடிவில் வந்து காப்பாற்றியது. காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி சாரதா பீடம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாக சாஸ்திரிகளுக்குப் பார்வை கிடைக்க அருள்புரிந்தது. ஸ்ரீராகவேந்திரருடன் உடனிருந்து அருள் பாலித்தது. மீனாட்சி கோயில் மடப்பள்ளி சமையல்காரர் சீனிவாசனுக்காக தனது மூக்குத்தியை வெளிச்சம் தர வைத்து சமையல் செய்தது. இப்படி எத்தனையோ மீனாட்சி சொக்கநாதர் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளுக்குச் சான்றாக இப்போதும் பல பொருள்கள் -இடங்கள் உள்ளன. அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நலமளிக்கும் தெய்வமாகவே அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார்.
மதுரை:- சிவபெருமான் தன் தலையில் சூடியுள்ள பிறைச்சந்திரனிடத்தில் உள்ள அமிர்தமாகிய மதுவைப் பொழிந்து நாகம் உமிழ்ந்த நஞ்சின் வேகத்தை நீக்கி புனிதப்படுத்தியதால், அது மதுரை என்ற பெயரானது. இதனை திருவிளையாட்டுப் புராணம் செப்புகிறது. கடம்பவனம் மதுரையாக உருவான போது நடுவில் தாமரை மொட்டுப்போல கோயிலும் அதைச் சுற்றி இதழ்கள் போல தெருக்களும் அமைக்கப்பட்டன.
பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை பங்காளிக்காய்ச்சலால் பாண்டிய மன்னர் ஆட்சிக்கே கேடுவந்து அத்துடன் அந்தப்பரம்பரையே அழிந்தது. அரசுரிமைப் போட்டியில் ஒருவன் இலங்கை மன்னனிடமும், இன்னொருவன் டெல்லி சுல்தானிடமும் உதவிகோரிச் செல்ல டெல்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் (உண்மைப்பெயர் : மலுக்கு நேமி-இவன் மூன்றாம் பாலினம் - அரவாணி) மதுரைக்கு வந்து கோயிலையும் நாட்டையும் கொள்ளையடித்தான். பாண்டிய நாடு இஸ்லாமியர் வசமானது. 48 ஆண்டுகள் 7 முஸ்லீம் மன்னர்கள் ஆண்டனர். மீனாட்சி கோயில் இடிக்கப்பட்டு பூஜை செய்யப்படாமல் கிடந்தது. கி.பி.1378 ல் விஜய நகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த குமார கம்பண்ணர் அவர்களை வென்று பாண்டிய நாட்டை மீட்டார். அதன்பிறகு நாயக்கர்களின் ஆட்சி தொடங்கியது. சிறிது சிறிதாக கோயில் எடுத்துக் கட்டப்பட்டது. திருமலை நாயக்காரால் கோயில் மட்டுமின்றி நகரமும் சிறப்பாக உருவாக்கப்பட்டது. நாயக்கர் மகால் வண்டியூர் தெப்பக்குளம், திருவிழாக்கள் எல்லாமே புதிதாகப் படைக்கப்பட்டன.
மதுரை நகரைப்பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாவம்சம் என்ற நூலிலும் மதுரை பற்றிய தகவல் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ரோமாபுரியை ஆண்ட அகஸ்டசிடம் தம்தூதரை அனுப்பிய வரலாறு உள்ளது. மதுரை பற்றியும் மீனாட்சி பற்றியும் எழுத எண்ணூறு பக்கங்கள் தேவைப்படும.;
மதுரை ஒரு வரலாற்றுக்குவியல் புராணத்தின் பொக்கிஷம்.
சித்திரை வீதி, ஆடிவீதி, ஆவணி வீதி என கோயிலின் நாற்புறமும் தமிழ் மாதங்களின் பெயர்களில் தெருக்கள், ஆண்டு முழவதும் விழாக்கள். விழாக்களின் உச்சம் சித்திரைத் திருவிழா. பல இலட்சம் மக்கள் பரவசத்துடன் கூடும் பெருவிழா, பண்பாட்டின் கலைச்சின்னமாக விளங்கும் மதுரைக்கு இணை மதுரைதான். (தொகுப்பு: மதன்)
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.