முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் கலைப்பொருட்களை பராமரிக்கும் பணி: புதிய நிபுணர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

புதன்கிழமை, 16 நவம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, கோவில் கலைப்பொருட்களை பராமரிக்கும் பணிக்கு புதிய நிபுணர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்காக டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருக்கோயில்கள் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகள், திருப்பணி மேற்கொள்ளுதல், கலைப் பொக்கிஷங்கள், பண்பாட்டு சின்னங்கள் பராமரித்தல் ஆகியவை தொடர்பாக வல்லுனர்களின் கருத்து பெற்று முறையாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து விருப்பம் கோரும் விண்ணப்பங்களை துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து 15.11.2016-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது திருக்கோயில் தொடர்புடைய மேலும் பல்வேறு துறை வல்லுநர்களை பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15.12.2016 என நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே மேற்கண்ட பொருள் குறித்து விருப்பம் தெரிவிக்க உள்ளோர் 15.12.2016 வரை விண்ணப்பத்தினை என்ற www.tnhrce.org இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்