எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உயிர் பிச்சை கொடுத்த தாய்க்கு பாடை காவடி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தும் பங்குனி திருவிழா
தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், அந்த வேண்டுதலுக்கு செவி சாய்த்து தெய்வங்கள் அதனை நிறைவேற்றித் தருவதும்,அந்த நன்றிக்கடனுக்காக தெய்வங்களுக்கு மனிதன் நேர்த்திக்கடன் செலுத்துவதும் பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம்தான், ஆனால் அந்த நேர்த்திக்கடனானது, குழந்தைப்பிறந்தால் தொட்டில் கட்டுவது அபிஷேக ஆராதனை செலவுகளை ஏற்றுக்கொள்வது, கோவிலுக்கு பொருட்கள் எதாவது வாங்கிக்கொடுப்பது, பால்குடம் எடுப்பது,காவடி எடுப்பது என்றுதான் பெரும்பாலும் இருக்கும்.
ஆனால் தன் உயிரை பிழைக்க வைத்த தெய்வத்துக்கு, பூரணமாகு குணமடைந்ததும் பாடை கட்டி அதில் பிணம் போல் படுத்துக் கிடந்து, கோவிலைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் முறை என்பது கேள்விப்படாத ஒன்றாகத் தான் இருக்கிறது.
மகா மாரியம்மன் :
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வலங்கைமான் என்ற ஊர். இந்த ஊரின் சாலை ஒரத்திலேயே அமைந்துள்ள சீதளாதேவி மகா மாரியம்மன் கோவிலில் தான் இந்த ஆச்சரியம் அளிக்கும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. வாருங்கள் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலை கொஞ்சம் வலம் வரலாம்.
வலங்கைமான் கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் மகா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் அருகிலேயே ஆலங்குடி குரு பகவான் தலமும், பைரவ உபாசகர் குரு பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் வைரவர் அருள் கரக்கும் தலமும் உள்ளது.
குழந்தை வடிவில் :
வலங்கை மகாமாரியம்மன் உருவில் சிறியவள்: எளிமையானவள். ஆனால் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிவதில் அவளை விட பெரியவர் எவரும் இல்லை என்ற நம்பிக்கையை பக்தர்களிடம் விதைத்திருப்பவள். குழந்தையே இந்த தலத்தில் மாரியம்மனாக வீற்றிருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது. சுமார் 220 ஆண்டுகளுக்கு முன் வலங்கைமான் ஊரின் அருகில் உள்ளஅடைக்கலங்காத்த அய்யனார் கோவில் பக்கத்தில் ஒரு குழந்தை கிடந்தது. அந்த குழந்தையை வலங்கைமானில் உள்ள ஏழைப் பெண் ஒருவர் வளர்த்து வந்தாள். இந்த நிலையில் அந்த குழந்தை வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டது.
நாகதோஷம் தீரும் :
அன்று இரவு ஊர் மக்களின் கனவில் வந்த அந்த குழந்தை, ‘எனக்கு உடல் இல்லையே தவிர, உயிர் இருக்கிறது’ என்று கூறி மறைந்தது. மற்றொரு முறை ஊரில் உள்ள பெண் ஒருவரின் மீது அருள் வடிவில் வந்த அம்மன், ‘நான் தான் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிப்படுவர்களுக்கு அபயம் தந்து காப்பேன் என அருளியது.
இதனை கேட்டதும் ஊர் மக்கள் , குழுந்தைக்கு சமாதி எழுப்பிய சீதளாதேவி மகா மாரியம்மனாக இருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்.
நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து வைத்தபடி வீர சிம்மாசன்த்தில் மகா மாரியம்மன் வீற்றிருக்கிறார். வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்கரத்தில் கத்தியுமும், இடது மேற்க ரத்தில் சூலமும், இடது கீழ்க ரத்தில் கபாலமும் வைத்திருக்கிறார். அம்மனின் இரு தோள்களிலும் இரு நாகங்கள் உள்ளன. இதனால் இந்த தல மாரியம்மனை தீபமேற்றி வழிபட்டு, அர்ச்சித்தால் நாகதோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
நோய் தீர்க்கும் அம்மன் :
இத்தலத்தின் உள் சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர் இருளன், பேச்சாயி, பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் உடனுறை மதுரை வீரன் சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளன. வாய் பேச முடியாத குழந்தைகளை இந்த தலத்துக்கு அழைத்து வந்து மாரியம்மனுக்கும் பேச்சாயி அம்மனுக்கும் தனித்தனியாக சர்க்கரை பொங்கலிட்டு படைத்து வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. உடலில் எந்த பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கபிரதடசணம் வருவது இந்த தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.
அம்மை நோய் கண்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து மாரியம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் அம்மை நோய் தாக்கம் குறைந்து உடனே குணமாகி விடும். கண் நோய் மற்றும் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு நாட்கள் கோவிலில் தங்கி இருந்து அம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் கண் பார்வையில் கண்டிப்பாக முன்னேற்றம் காணப்படும், கண் நோய் குணமானவர்கள் வெள்ளியில் கண் மலர் வாங்கி அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம். கால் நோய் மற்றும் வாத நோய்களுக்கு கோவிலில் தரும் எலுமிச்சையின் சாறு, வேப்பிலை, குங்குமம் மூன்றையும் குழைத்து தடவி வந்தால் நோய் விரைவில் குணமடையும்.
போலீசாரின் மண்டகப்படி :
வலங்கைமான் காவல் நிலையத்தில 1942-ம் ஆண்டு ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவின் போது பாடைக் காவடி மற்றும் அலகு பாவடி போன்றவை எடுக்கக் கூடாது என்று அந்த போலீஸ் அதிகாரி தடை விதித்தர். அந்த வருடம் பாடைக்காவடி எடுத்து வந்த பக்தர்களை வாய்க்கு வந்தபடி திட்டியாதோடு, தன் கைப்பிரம்பால் அவர்களை விரட்டியடித்தார்.
பக்தர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கண்டு துடிக்காமல் இருப்பவர் தாயல்லவே! சிறிது நேரத்தில் அந்த போலீஸ் அதிகாரியின் கண் பார்வை திடீரென்று பறிபோனது. ‘கண்தெரிய வில்லையே! என்று கதறிய அந்த அதிகாரி அம்மை நோயாலும் பாதிக்கப்பட்டார். அகிலத்தை காக்கும் அம்மனின் பக்தர்களை துர்வார்த்தைகளால் தூற்றியதால். அம்மனின் கோபத்திற்கு கிடைத்த சாபம் இதுவென்று அப்போது தான் போலீஸ் அதிகாரிக்கு தெரியவந்தது.
அவர் உடனடியாக ஒரு பேப்பரையும், பேனா வையும் அங்கிருந்த ஒருவரிடம் வாங்கி, இனி மேல் எந்த அதிகாரியும் என்போல் பாடைக் காவடி விழாவுக்கும், இறை காரியத்திற்கும் தடையாக இருக்காதீர்கள் என்று எழுதி கையெழுத்திட்டார். சற்று நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அன்று முதல் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்து பங்குனி மாத திருவிழாவின் போது ஒரு நாள் மண்டகப்படி இன்றளவும், பயபக்தியுடன் அம்மனுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பாடைக்காவடி :
தங்களது வேண்டுதல் நிறைவேறி, பாடைக்காவடி செலுத்தும் பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருக்க வேண்டும். ஒருவர் இறந்தால் எவ்வாறு பாடைக் கட்டி அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறதோ, அதே போலவே இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்படும். இந்த தலத்தில் அருகில் ஓடும் குடமுருட்டி ஆற்றில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் நீராடுவார்கள். பின்னர் அவர் பாடையில் படுக்க வைக்கப்பட்டு, அதை நான்கு பேர் தூக்கிக் கொண்டு கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வருவார்கள். அப்போது பாடையில் படுத்திருப்பவரின் தலையில் தாடையுடன் சேர்த்து கயிறு கட்டப்பட்டிருக்கும். கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்.
கோவிலின் முன் மண்டபத்தில் பாடையை கொண்டு வந்து இறக்கியதும். கோவில் பூசாரி வந்து அன்னையை வேண்டிக்கொண்டு. அபிஷேக நீர் பாடையில் இருப்பவரின் மீது தெளித்து விபூதி பூசி எழச் செய்வார். பங்குனி மாத இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் இங்கு வரும் பாடை காவடியில் எண்ணிக் கையை வைத்தே இந்த அம்மனின் அருளையும், கருணையையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
பங்குனி மாத திருவிழா
இந்த ஆலயத்தில் ஆவணி மாத தெப்பத் திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. விழாக்களின் முக்கியமானதாக பங்குணி மாதத்தில் நடைபெறும் பாடைக் காவடித் திருவிழா உள்ளது. உயிருக்கு போராடுபவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், ‘எனக்கு உயிர்ப்பிச்சை கொடு தாயே! என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதம், மாரியம்மனுக்கு பாடைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்திறார்கள்.
இந்த பாடைக் காவடி நேர்த்திக் கடன் செலுத்தும் திருவிழாதான் பங்குனி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் திருவிழாவானது 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். எட்டாம் நாளான பங்குனி மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமையில் பாடைக் காவடி திருவிழா நடத்தப்படும். வருகிற மார்ச் 23-ம் தேதி பங்குனி திருவிழா தொடங்குகிறது.
பேருந்தில் செல்லும் வழி :
கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் பேருந்தில் வலங்கைமான் மகாமாரியம்மன் பேருந்து நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் வாசலில் இறக்கிவிடுவார்கள். கோவில் தொலைபேசி எண் : 04374264575 http://www.mahamariammantemple.com/ சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வரும் பக்தர்கள் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறி வலங்கைமான் என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 5மணி முதல் 1மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 10மணி வரை நடை திறந்திருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.