முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷாலுக்கு ‘ஷாக்’ கொடுத்த சிம்பு

சனிக்கிழமை, 19 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகர் விஷாலின் நெருங்கிய பெண் தோழியான வரலட்சுமி சரத்குமாரை அழைத்து நடிகர் சிம்பு விருந்து கொடுத்தது விஷாலுக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி சார்பில் போட்டியிட்டார் சிம்பு. எதிர் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கும், சிம்புவிற்குமான இடைவெளி அதிகரித்தது.தேர்தலில் சரத்குமார் அணி தோல்வியடைந்து விஷால் அணி வெற்றி பெற்றதும் மௌனமாக இருந்தார் சிம்பு. பின்னர் பீப் பாடல் விவகாரத்திலும் சர்ச்சை ஏற்பட்டு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் சிம்பு, படக்குழுவினருக்கும், தனது நண்பர்களுக்கும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்தார். இதில் இயக்குநர் கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் வரலட்சமி சரத்குமார், திரிஷா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விருந்தின்போது சிம்புவுடன் வரலட்சுமி சரத்குமாரும், திரிஷாவும் நடனமாடி நெருக்கமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

விஷாலின் காதலி என்று சொல்லப்படும் வரலட்சுமி, சிம்புவின் விருந்திற்கு போனது விஷால் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து வரலட்சுமி தரப்பில் விசாரித்த போது போடா போடி படத்தில் சிம்புவுடன் நடித்தேன். அதிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்கள். அதனால் அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக விஷாலுடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் அவரை வெறுப்பேத்தவே இதில் கலந்து கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் விஷாலுக்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் விஷால் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்