முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் பொதுமக்கள் அவதி நீடிப்பு

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை பலர் பாராட்டினாலும் இதனால் அடித்தட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொஞ்சமல்ல.பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பின்னர் உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் அலை மோதியது.ஏ.டி.எம்.களில் ரூ.2000 வரை எடுக்கலாம் என்ற விதியும் தளர்த்தப்பட்டு ரூ.2,500 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பெரும் பாலான ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் ஏ.டி.எம்.கள் முடங்கின.இதற்கிடையே பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவதை தடுக்க விரலில் ‘மை’ வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரு.4,500-க்கு பதிலாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.பழைய பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு விதிமுறைகளை அடிக்கடி மாற்றி நெருக்கடி கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறைந்தது.விரலில் மை, ரூ.2000 ஆக குறைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கூட்டம் குறைந்தது.இதற்கிடையில் ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும் ரூபாய் நோட்டுகள் அளவு குறைக்கப்பட்டது.

புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டும் குறைந்த அளவில் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.போதிய அளவு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததால் பணம் மாற்ற வருபவர்களுக்கு கொடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறுகிறார்கள்.நீண்ட வரிசையில் காத்து நின்றாலும் வங்கிகளில் பணம் போதுமான அளவு வினியோகிக்கப்படாததால் கடந்த 4 நாட்களாக பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளும் பற்றாக் குறை ஆனதால் பணத்தட்டுப் பாடால் பொதுமக்களுக்கு வங்கி கணக்கில் இருந்தும் பணம் கொடுக்க முடிய வில்லை. வாரத்திற்கு அதிக பட்சமாக ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்றாலும் அதனை கொடுக்க பணம் இல்லாமல் அனைத்து வங்கிகளும் திண்டாடுகின்றன.ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக 5 நாட்களாக பணம் மாற்றம் நிறுத்தப்பட்டது. அந்தந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவை அளிக்கப்பட்டன.சனிக்கிழமை மூத்த குடிமக்களுக்கு மட்டும் ரூ.2000-க்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்து தரப்பட்டன. கடந்த 11 நாட்களாக விடுமுறையின்றி செயல்பட்ட வங்கி ஊழியர்களுக்கு நேற்று முன் தீனம் விடுமுறை அளிக்கப்பட்டன.

நேற்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்ட போதிலும் பணத்தட்டுபாடு காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகளில் பணம் கையிருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடிய வில்லை.ஒரு சில வங்கிகளில் மிக குறைந்த அளவில் பணம் இருப்பு இருந்ததால் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணம் வழங்கினார்கள். பழைய நோட்டு மாற்றம் செய்து தரப்படவில்லை.ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு வினியோகிக்கப்படும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நேற்றும் நீடித்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு தேவையை கருதி அதிகளவு பணம் எடுக்க வந்தவர்களுக்கும் பணம் இல்லாததால் வழங்க முடிய வில்லை. வியாபாரிகள், சிறுதொழில் செய்பவர்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை பணத் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதித்துள்ளன.சென்னையில் நேற்று ஏ.டி.எம். மையங்களிலும் வங்கிகளிலும் மக்கள் வரிசையில் காத்து நின்றனர். வங்கிகளில் பணம் இல்லாததால் டெபாசிட் மட்டும் ஏற்கப்பட்டது.

மூத்த குடிமக்களுக்கு மட்டும் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்து ரூ.2000 கொடுக்கப்பட்டது.வங்கி கணக்கு இல்லாதவர்கள், பணம் மாற்றம் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றார்கள்.வங்கிகளில் பணம் மாற்றுவதற்கும், பணம் எடுப்பதற்கும் அந்தந்த வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எந்தவொரு வங்கியிலும் அந்த வங்கியை சாராதவர்கள் பணத்தை மாற்ற முடியவில்லை.

இதனால் கடந்த 3 நாட்களாக பொது மக்களுக்கு பணத்தை மாற்றவது நிறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வங்கிகளிலும் வாடிக்ககையாளர் கூட்டம் மட்டும் காணப்படுகிறது.13-வது நாளாகியும் இன்னும் போதுமான அளவு பணம் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து கனரா வங்கி வேப்பேரி கிளை மேலாளர் கணேஷ் கூறுகையில், “நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் பணம் வழங்குகிறோம். பழைய நோட்டுகளை மாற்றி பணம் கொடுக்கவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு படிதான் பணம் எடுக்க முடியும். வங்கிகளில் கணக்கு வைக்காதவர்களுக்கு பணம் மாற்றும் பணி 3 நாட்களாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இது பற்றி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மட்டும் வருவதால் அவர்களுக்கு நிறைவான சேவை வழங்க முடிகிறது. இதனால் வங்கிகளில் கூட்டம் குறைந்துள்ளது என்றார். புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் பால்ராஜ் கூறுகையில், “ரிசர்வ் வங்கியில் இருந்து தேவையான அளவிற்கு பணம் வராததால் பணப்பரிமாற்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு உச்சவரம்பு தொகை ரூ.24 ஆயிரம் தர முடியாமல் 2 ஆயிரம், 5 ஆயிரம் வரை கொடுக்கிறோம். ஐ.ஏ.சி. கிளைகளில் விரலில் ‘மை’ தடவி நேற்று முதல் ரூ.2000 மாற்றி கொடுக்கிறோம்” என்றார்.பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீர வேண்டும் என்றால் புதிய ரூ.500 நோட்டுகளை வினியோகம் செய்ய வேண்டும். அப்போதுதான் நிலைமை ஓரளவிற்கு சீரடைய வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago