எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை பலர் பாராட்டினாலும் இதனால் அடித்தட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொஞ்சமல்ல.பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பின்னர் உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் அலை மோதியது.ஏ.டி.எம்.களில் ரூ.2000 வரை எடுக்கலாம் என்ற விதியும் தளர்த்தப்பட்டு ரூ.2,500 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பெரும் பாலான ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் ஏ.டி.எம்.கள் முடங்கின.இதற்கிடையே பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவதை தடுக்க விரலில் ‘மை’ வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரு.4,500-க்கு பதிலாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.பழைய பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு விதிமுறைகளை அடிக்கடி மாற்றி நெருக்கடி கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறைந்தது.விரலில் மை, ரூ.2000 ஆக குறைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கூட்டம் குறைந்தது.இதற்கிடையில் ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும் ரூபாய் நோட்டுகள் அளவு குறைக்கப்பட்டது.
புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டும் குறைந்த அளவில் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.போதிய அளவு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததால் பணம் மாற்ற வருபவர்களுக்கு கொடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறுகிறார்கள்.நீண்ட வரிசையில் காத்து நின்றாலும் வங்கிகளில் பணம் போதுமான அளவு வினியோகிக்கப்படாததால் கடந்த 4 நாட்களாக பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளும் பற்றாக் குறை ஆனதால் பணத்தட்டுப் பாடால் பொதுமக்களுக்கு வங்கி கணக்கில் இருந்தும் பணம் கொடுக்க முடிய வில்லை. வாரத்திற்கு அதிக பட்சமாக ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்றாலும் அதனை கொடுக்க பணம் இல்லாமல் அனைத்து வங்கிகளும் திண்டாடுகின்றன.ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக 5 நாட்களாக பணம் மாற்றம் நிறுத்தப்பட்டது. அந்தந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவை அளிக்கப்பட்டன.சனிக்கிழமை மூத்த குடிமக்களுக்கு மட்டும் ரூ.2000-க்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்து தரப்பட்டன. கடந்த 11 நாட்களாக விடுமுறையின்றி செயல்பட்ட வங்கி ஊழியர்களுக்கு நேற்று முன் தீனம் விடுமுறை அளிக்கப்பட்டன.
நேற்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்ட போதிலும் பணத்தட்டுபாடு காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகளில் பணம் கையிருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடிய வில்லை.ஒரு சில வங்கிகளில் மிக குறைந்த அளவில் பணம் இருப்பு இருந்ததால் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணம் வழங்கினார்கள். பழைய நோட்டு மாற்றம் செய்து தரப்படவில்லை.ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு வினியோகிக்கப்படும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நேற்றும் நீடித்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு தேவையை கருதி அதிகளவு பணம் எடுக்க வந்தவர்களுக்கும் பணம் இல்லாததால் வழங்க முடிய வில்லை. வியாபாரிகள், சிறுதொழில் செய்பவர்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை பணத் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதித்துள்ளன.சென்னையில் நேற்று ஏ.டி.எம். மையங்களிலும் வங்கிகளிலும் மக்கள் வரிசையில் காத்து நின்றனர். வங்கிகளில் பணம் இல்லாததால் டெபாசிட் மட்டும் ஏற்கப்பட்டது.
மூத்த குடிமக்களுக்கு மட்டும் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்து ரூ.2000 கொடுக்கப்பட்டது.வங்கி கணக்கு இல்லாதவர்கள், பணம் மாற்றம் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றார்கள்.வங்கிகளில் பணம் மாற்றுவதற்கும், பணம் எடுப்பதற்கும் அந்தந்த வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எந்தவொரு வங்கியிலும் அந்த வங்கியை சாராதவர்கள் பணத்தை மாற்ற முடியவில்லை.
இதனால் கடந்த 3 நாட்களாக பொது மக்களுக்கு பணத்தை மாற்றவது நிறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வங்கிகளிலும் வாடிக்ககையாளர் கூட்டம் மட்டும் காணப்படுகிறது.13-வது நாளாகியும் இன்னும் போதுமான அளவு பணம் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து கனரா வங்கி வேப்பேரி கிளை மேலாளர் கணேஷ் கூறுகையில், “நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் பணம் வழங்குகிறோம். பழைய நோட்டுகளை மாற்றி பணம் கொடுக்கவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு படிதான் பணம் எடுக்க முடியும். வங்கிகளில் கணக்கு வைக்காதவர்களுக்கு பணம் மாற்றும் பணி 3 நாட்களாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இது பற்றி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மட்டும் வருவதால் அவர்களுக்கு நிறைவான சேவை வழங்க முடிகிறது. இதனால் வங்கிகளில் கூட்டம் குறைந்துள்ளது என்றார். புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் பால்ராஜ் கூறுகையில், “ரிசர்வ் வங்கியில் இருந்து தேவையான அளவிற்கு பணம் வராததால் பணப்பரிமாற்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு உச்சவரம்பு தொகை ரூ.24 ஆயிரம் தர முடியாமல் 2 ஆயிரம், 5 ஆயிரம் வரை கொடுக்கிறோம். ஐ.ஏ.சி. கிளைகளில் விரலில் ‘மை’ தடவி நேற்று முதல் ரூ.2000 மாற்றி கொடுக்கிறோம்” என்றார்.பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீர வேண்டும் என்றால் புதிய ரூ.500 நோட்டுகளை வினியோகம் செய்ய வேண்டும். அப்போதுதான் நிலைமை ஓரளவிற்கு சீரடைய வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.