எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை பலர் பாராட்டினாலும் இதனால் அடித்தட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொஞ்சமல்ல.பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பின்னர் உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் அலை மோதியது.ஏ.டி.எம்.களில் ரூ.2000 வரை எடுக்கலாம் என்ற விதியும் தளர்த்தப்பட்டு ரூ.2,500 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பெரும் பாலான ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் ஏ.டி.எம்.கள் முடங்கின.இதற்கிடையே பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவதை தடுக்க விரலில் ‘மை’ வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரு.4,500-க்கு பதிலாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.பழைய பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு விதிமுறைகளை அடிக்கடி மாற்றி நெருக்கடி கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறைந்தது.விரலில் மை, ரூ.2000 ஆக குறைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கூட்டம் குறைந்தது.இதற்கிடையில் ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும் ரூபாய் நோட்டுகள் அளவு குறைக்கப்பட்டது.
புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டும் குறைந்த அளவில் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.போதிய அளவு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததால் பணம் மாற்ற வருபவர்களுக்கு கொடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறுகிறார்கள்.நீண்ட வரிசையில் காத்து நின்றாலும் வங்கிகளில் பணம் போதுமான அளவு வினியோகிக்கப்படாததால் கடந்த 4 நாட்களாக பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளும் பற்றாக் குறை ஆனதால் பணத்தட்டுப் பாடால் பொதுமக்களுக்கு வங்கி கணக்கில் இருந்தும் பணம் கொடுக்க முடிய வில்லை. வாரத்திற்கு அதிக பட்சமாக ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்றாலும் அதனை கொடுக்க பணம் இல்லாமல் அனைத்து வங்கிகளும் திண்டாடுகின்றன.ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக 5 நாட்களாக பணம் மாற்றம் நிறுத்தப்பட்டது. அந்தந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவை அளிக்கப்பட்டன.சனிக்கிழமை மூத்த குடிமக்களுக்கு மட்டும் ரூ.2000-க்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்து தரப்பட்டன. கடந்த 11 நாட்களாக விடுமுறையின்றி செயல்பட்ட வங்கி ஊழியர்களுக்கு நேற்று முன் தீனம் விடுமுறை அளிக்கப்பட்டன.
நேற்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்ட போதிலும் பணத்தட்டுபாடு காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகளில் பணம் கையிருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடிய வில்லை.ஒரு சில வங்கிகளில் மிக குறைந்த அளவில் பணம் இருப்பு இருந்ததால் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணம் வழங்கினார்கள். பழைய நோட்டு மாற்றம் செய்து தரப்படவில்லை.ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு வினியோகிக்கப்படும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நேற்றும் நீடித்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு தேவையை கருதி அதிகளவு பணம் எடுக்க வந்தவர்களுக்கும் பணம் இல்லாததால் வழங்க முடிய வில்லை. வியாபாரிகள், சிறுதொழில் செய்பவர்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை பணத் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதித்துள்ளன.சென்னையில் நேற்று ஏ.டி.எம். மையங்களிலும் வங்கிகளிலும் மக்கள் வரிசையில் காத்து நின்றனர். வங்கிகளில் பணம் இல்லாததால் டெபாசிட் மட்டும் ஏற்கப்பட்டது.
மூத்த குடிமக்களுக்கு மட்டும் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்து ரூ.2000 கொடுக்கப்பட்டது.வங்கி கணக்கு இல்லாதவர்கள், பணம் மாற்றம் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றார்கள்.வங்கிகளில் பணம் மாற்றுவதற்கும், பணம் எடுப்பதற்கும் அந்தந்த வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எந்தவொரு வங்கியிலும் அந்த வங்கியை சாராதவர்கள் பணத்தை மாற்ற முடியவில்லை.
இதனால் கடந்த 3 நாட்களாக பொது மக்களுக்கு பணத்தை மாற்றவது நிறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வங்கிகளிலும் வாடிக்ககையாளர் கூட்டம் மட்டும் காணப்படுகிறது.13-வது நாளாகியும் இன்னும் போதுமான அளவு பணம் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து கனரா வங்கி வேப்பேரி கிளை மேலாளர் கணேஷ் கூறுகையில், “நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் பணம் வழங்குகிறோம். பழைய நோட்டுகளை மாற்றி பணம் கொடுக்கவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு படிதான் பணம் எடுக்க முடியும். வங்கிகளில் கணக்கு வைக்காதவர்களுக்கு பணம் மாற்றும் பணி 3 நாட்களாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இது பற்றி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மட்டும் வருவதால் அவர்களுக்கு நிறைவான சேவை வழங்க முடிகிறது. இதனால் வங்கிகளில் கூட்டம் குறைந்துள்ளது என்றார். புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் பால்ராஜ் கூறுகையில், “ரிசர்வ் வங்கியில் இருந்து தேவையான அளவிற்கு பணம் வராததால் பணப்பரிமாற்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு உச்சவரம்பு தொகை ரூ.24 ஆயிரம் தர முடியாமல் 2 ஆயிரம், 5 ஆயிரம் வரை கொடுக்கிறோம். ஐ.ஏ.சி. கிளைகளில் விரலில் ‘மை’ தடவி நேற்று முதல் ரூ.2000 மாற்றி கொடுக்கிறோம்” என்றார்.பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீர வேண்டும் என்றால் புதிய ரூ.500 நோட்டுகளை வினியோகம் செய்ய வேண்டும். அப்போதுதான் நிலைமை ஓரளவிற்கு சீரடைய வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.