முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் மின் ஆலை விபத்தில் 40 பேர் பலி

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

பெய்சிங் : சீனாவின் ஜியாங்ஷி மாகாணத்தில்  நேற்று  மின் ஆலை ஒன்றில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 40 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "சீனாவின் ஜியாங்ஷி மாகாணத்தில் மின் ஆலை ஒன்றில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரும்புக் கம்பிகள் சரிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியிலிருந்த ஊழியர்கள் 40 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.   சீனாவில் கடந்த சில வருடங்களாகவே கட்டுமானத் துறையில் நடைபெறும் ஊழல் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருவதாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்