எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நாடா புயலை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு அரசு தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் புதுவை அருகே உருவாகி உள்ள நாடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாடா புயல், வேதாரண்யம் - கடலூர் இடையே கரை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இதன்காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆய்வுக்கூட்டம்
இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையகத்தின் அவசர கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருவாய் துறை செயலாளர் சந்திர மோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் சி.என்.மகேஷ்வரன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜி.லதா ஆகியோர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
தயார் நிலையில் மீட்புக்குழு
நாடா புயலை எதிர்கொள்வதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளோம். அந்த வகையில் நாடா புயலை எதிர்கொள்ள காவல் முறை, மின்சார வாரியம், வருவாய் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது. அதே போன்று மாவட்ட அளவிலும் இது போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்பவேண்டாம்
மேலும் புயல் தொடர்பாக சமூக வலைத்தளம் உட்பட பிறவற்றின் மூலம் வரும் வதந்தி செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அரசால் சார்பில் அதிகாரபூர்வமாக அளிக்கப்படும் செய்திகளை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் வரும் செய்திகளை அறிந்து அதற்கேற்றார் போல் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். பால் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மழையினால் பாதிப்பில்லாமல் தங்குதடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்ந்து கண்காணிப்பு
மழையின் காரணமாக எந்த இடத்திலும் மனித உயி்ரிழப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, அரசுக்கு வழிகாட்டிதல்களை வழங்கியுள்ளார். அதன்படி அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த மழையினால் ஏற்பட்ட அனுபவங்களை கவனத்தில் கொண்டு, நாடா புயலால் அத்தகைய எந்த பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். சுரங்க பாதைகள், தாழ்வான பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் நீர் தேங்கினால் அதனை உடனடியாக சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் அகற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இருப்பு
மேலும் கடந்த ஆண்டு வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் கண்டறிய பட்டு அந்த பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் மக்கள் தங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பாக மக்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து மக்களை மீட்டு தங்க வைக்க இடம் மற்றும் உணவு பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் அரசு அறிவிப்பு வெளியாவதற்குள் எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு சேவை
மேலும் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது செல்போன்கள் இயங்காமல் செயலிழந்து போனது. அது போன்ற நிகழ்வு தற்போது நடைபெறாமல் தடுக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மழையினால் செல்போன் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடா புயலின் அபாயம் இருக்க கூடிய பகுதிகளில் மக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பகுதி மக்கள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளின் கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அதன் பெறப்படும் அதிகார பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்க வேண்டும் நீர்நிலைகள் மற்றும் ஆற்று கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான அளவுக்கு குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும். கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.மழைநீரில் செல்வதாயின், பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கையில் கொம்பு வைத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.மேலும் மின்கம்பங்களிலிருந்து அறுந்த மின்கம்பிகளை பார்க்க நேர்ந்தால், பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு எண்கள்
மாநில அளவில் 1070 என்ற எண்ணுக்கும் மாவட்ட அளவில் 1077 என்ற எண்ணுக்கும் இந்த மழை பாதிப்பு தொடர்பாக மக்கள் தகவல்களை தெரிவிக்கலாம். உடனடியா மாவட்ட மற்றும் தாலுக்காக்கலில் இயங்கும் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுப்படும். 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படும். மேலும் புயல் தொடர்பாக ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து இதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
இந்த மழையினால் மக்கள் எந்த விதமான அச்சமும் அடைய தேவையில்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.