முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த பந்து வீச்சைக் கொண்ட கோலி தலைமையிலான அணி வெளிநாட்டில் சாதனைப் படைக்கும் : சேவாக் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - சிறந்த பந்து வீச்சைக் கொண்ட விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, வெளிநாட்டில் சாதனைப் படைக்கும்: என சேவாக் கூறியுள்ளார்.

சாதனை படைக்கும் : இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்ந்தவர் வீரேந்தர் சேவாக். இவர் தற்போதைய இந்திய டெஸ்ட் அணி குறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி தலைமையிலான தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் அணி, துணைக் கண்டத்தை விட்டு வெளியில் வெற்றிபெறக் கூடிய அளவிற்கு திறனும், திறமையும் பெற்றுள்ளது என்று நான் நம்புகிறேன்.சவுரங் கங்குலி தலையிலான இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளை வென்றதுபோல் தற்போதைய அணியால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

கோலிக்கு பாராட்டு
விராட் கோலி தலைமையிலான பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது. அதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். டெஸ்ட் அணியில் 20 விக்கெட்டுக்களை வீழ்த்த சிறந்த பந்து வீச்சாளர்கள் தேவை. நாம் சிறந்த வீரர்களான உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும் இசாந்த் சர்மா போன்ற பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இவர்களால் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தர முடியும். இந்திய ஆடுகளத்தில் வெளிப்படுத்தும் சிறந்த ஆட்டத்தை வெளிநாட்டில் செயல்படுத்த முடியாது என்பதற்கான எந்த காரணமும் இல்லை. தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா 3-0 என அல்லது 2-1 என வெற்றி பெற வாய்ப்புள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்