முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதி : பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஜம்மு  - ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் வீடு ஒன்றில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே விடிய விடிய கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனிடையே பஞ்சாப் மாநிலம் பதான்கோட் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ராணுவத்தினர் 7 பேர் வீரமரணம்  : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டா  பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் உடையில் புகுந்த 3 தீவிரவாதிகள், கையெறி குண்டுகளை வீசியும், கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ராணுவ அதிகாரிகள் உட்பட ராணுவத்தினர் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை, ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே குல்காம்  மாவட்டத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் விடிய விடிய துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 2 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகள் தப்பிச் செல்ல முடியாதபடி அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 சுட்டுக்கொலை : இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனிடையே பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநில எல்லை பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆயுதங்களுடன் சிலர் சுற்றித்திருந்ததாக வந்த தகவலையடுத்து ராணுவத்தினருடன் இணைந்து போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்