முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா ஆத்மா சாந்தியடைய சபரி மலையில் அஸ்த்ர பூஜை நடந்தது

புதன்கிழமை, 7 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடைய சபரிமலையில் அஸ்த்ர பூஜை நடந்தது.
சபரிமலையில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து அங்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கைதான் அதிகமாகும்.

பிரார்த்தனை

 இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 1ம் தேதி கோவில் நடை திறந்ததில் இருந்து சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என சுவாமி ஐயப்பனிடம் பிரார்த்தனை செய்து வந்தார்கள்.  இந்த நிலையில் ஜெயலலிதா  மரணமடைந்த தகவல் கிடைத்ததும் பக்தர்கள் சோக வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

 தெய்வ பக்தி கொண்டவர்

 இதற்கிடையே சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் சன்னி தானத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடைய அஸ்த்ர பூஜை நடத்தியது. இந்த பூஜை நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

 இதையொட்டி, ஹோமத்தில் தேவசம் போர்டு தலைவர்  பிராயர் கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றி பிராயர்  கோபால கிருஷ்ணன் கூறுகையில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர். அவரது ஆத்மா சாந்தியடைய இந்த அஸ்த்ர பூஜை நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்