முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் மனிஷ் பாண்டே - ஷர்துல் தாக்கூரும் சேர்ப்பு

புதன்கிழமை, 7 டிசம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்தியா-இங்கிலாந்து இடையே இன்று நடைபெறும் 4-வது டெஸ்ட் தொடரில் ரகானேவுக்குப் பதிலாக மனிஷ் பாண்டேவும், முகம்மது சமிக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அலஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணியில் விளையாடும் அணியில் இரண்டு வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரகானேவுக்குப் பதிலாக மனிஷ் பாண்டேவும், பந்து வீச்சாளர் முகம்மது சமிக்குப் பதிலாக ஷர்துல்தாக்கூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் அந்த அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் தோல்வியிலிருந்து மீண்டு வர இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சி செய்து வருகிறார்கள். இன்று நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தோற்றால் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை ஏற்படும். இதனால் இன்று நடைபெறும் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற அந்த அணியின் வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்