எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் அமைத்தது தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை (சி.பி.ஐ.) முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும், தி.மு.கவை சேர்ந்தவருமான தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் இதர 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
சட்டவிரோத இணைப்பகம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில், தி.மு.கவைச்சேர்ந்த தயாநிதிமாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பதவியில் இருந்த போது அவரது அண்ணன் கலாநிதி மாறனின் சன் டி.வி உபயோகத்திற்காக சட்டவிரோதமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தை சென்னையில் போட் கிளப் அவென்யூவில் உள்ள தனது இல்லத்தில் அமைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இல்லத்தில் அமைக்கப்பட்ட இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் சன் டி.வி. பயன்பாடுகளுக்கு அது பயன்படுத்தப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த இணைப்பகம் அமைப்பது தொடர்பாக முறையாக தெரிவிக்கப்படவில்லை. இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தால் அரசுக்கு ரூ1.78கோடி இழப்பு ஏற்பட்டது . இது தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் இதர 3 பேர் மீது நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் அந்த விசாரணை அமைப்பு நேற்று அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இதர நபர்கள் முன்னாள் தெலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் அப்போதைய தனிச்செயலாளர் மற்றும் பி.எஸ்.என்.எல் பொது மேலாளர்கள் (தற்போது ஓய்வு) இருவரும் அடங்குவர்.
சி.பி.ஐ குற்றச்சாட்டு
இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம் பேரில் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2006ம் ஆண்டு வரை 364 தொலைபேசி நம்பர்கள், இணைப்புகள் சென்னை கோபால புரத்தில் உள்ள மாறனின் இல்லத்தில் அமைக்கப்பட்டது. மேலும் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 353 தொலைபேசி இணைப்புகள் சென்னை அவென்யூ போட் கிளப் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டது. இந்த தொலைபேசி இணைப்புகள் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் புதிய இல்லத்தில் அமைக்கப்பட்டது ஆகும். இதனைத்தவிர் மேலும் 10 போஸ்ட் பெய்ட் மொபைல் இணைப்புகள் முந்தய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் வாய் மொழி உத்தரவின் பேரில் தரப்பட்டது. இதில் 9 நம்பர்கள் கலாநிதி மாறனின் சன் டி.விக்காக தரப்பட்டது என சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் மீது சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதால் அரசுக்கு ரூ1.78கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல்
இந்த தொலைபேசி இணைப்புகளுக்கு எந்தவித பில்களும் தரப்படவில்லை. இதில் இருந்து அதிக அளவில் புள்ளி விவரங்கள், குரல், வீடியோ, மற்றும் ஆடியோ தகவல்கள் பெறப்பட்டன. சன் டி.வியின் உபயோகத்திற்காகவே இந்த இணைப்புகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டன என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.சட்ட விரோத தொலைபேசி இணைப்புகளுக்கு எந்த வித நிர்மாண கட்டணமோ, வாடகைக்கட்டணமோ பெறப்படவில்லை அகண்ட வரிசை வசதிகள் உள்ள இந்த தொலைபேசி இணைப்புகள் கண்ணாடி இழை வயர் மூலம் சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்புகள் அமைக்கப்பட்ட இரு இல்லங்களையும் இணைப்பதாக இருந்தது என்றும் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில், தயாநிதி மாறன், சன் டி.வி. கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.