எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
''காவிரி நடுவர் மன்றம் பிப்ரவரி 5, 2007ல் இறுதித் தீர்ப்பை வழங்கியவுடன், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்புடைய இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவையா என்பது குறித்து முதலில் முடிவெடுப்பதாகக் கூறியது. மேலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.
காவிரி நதி நீர் பங்கீடு :
மத்திய அரசு சார்பில் அக்டோபர் 27, 2016 இல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''காவிரி நதி நீர் பங்கீடு குறித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அல்லாத அதற்கென தனி அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுகிறார். எனவே, நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பையே இறுதியானதாகக் கருத வேண்டும். அத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்கள் மேல்முறையீடு செய்ய அரசியலமைப்பு விதிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யும் மனுக்களை மீண்டும் உச்ச நீதிமன்றத்திமே விசாரிக்க அரசியலமைப்புச் சட்ட விதிகளில் இடம் இல்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262(2) ன் படி, நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்த பிறகு அதில் உச்ச நீதிமன்றமோ, வேறு நீதிமன்றமோ தலையிட முடியாது; நாடாளுமன்றம் மட்டுமே தலையிட முடியும். எனவே இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல'' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வாதம் :
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அபிதவராய், ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழகத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ''காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு முழு உரிமை உள்ளது. 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டுச் சட்டப் பிரிவு 6 (2)ன் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்'' என்று எடுத்துரைத்தார்.
அதிகாரம் உண்டு :
உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அரசியல் சாசன அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு என்று டிசம்பர் 9 ஆம் தேதி வரவேற்கத்தக்க தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்களை அரசியல் சாசனம் 136 ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று அறிவித்ததோடு, கர்நாடக மாநில அரசு, வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையுடன் நடந்துகொள்வதுடன், இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பாசனப் பகுதியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிவிட்டதால் நடப்பு ஆண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி முற்றாக அழிந்துவிட்டது. பருவமழை பொய்த்து, நீரின்றி பயிர்கள் காய்ந்து போனதால் 12 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட துயரம் நிகழ்ந்தது.
மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்:
இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் முதலில் பிறப்பித்த உத்தரவை ஏற்று, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திடும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட