முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரியா அரசுப் படை தாக்குதல்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

அலெப்போ  - சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டுப் பகுதிகளில் கடுமையான தாக்குதலை சிரிய அரசுப் படை நடத்தி வருகிறது.  மனிதாபிமான அடிப்படையில்  கிளர்ச்சியாளர்கள் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற சில மணி நேரம் சண்டை நிறுத்தப்படும் என்று சிரியா அரசுப் படைக்கு ஆதர்வாக இருக்கும் ரஷ்யா அறிவித்தது. ஆனால் ரஷ்யாவின் அறிவிப்பை மீறி சிரியா  அரசுப் படைகள் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதில் பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 பேர் உயிரிழப்பு :
இது தொடர்பாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "தொடர்ந்து மூன்றாவது வாரமாக சிரிய அரசுப்படைகள் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. பஸ்தாம் -அல்- குசர் நகரம் மட்டுமே கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த 85சகவீத  பகுதிகள் அரசுப் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன"என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்