முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

குலம் செழித்து குடும்பம் தழைக்க அரிசிமாவுக் கோலமிடுவோம்!

மாதங்களில் சிறந்த மார்கழி மாதம் துவங்கியுள்ள நிலையில் அரிசி மாவினைக் கொண்டு வாசலில் கோலமிட்டால் குலம் செழித்து, குடும்பம் தழைத்து, தலைமுறை வளம் பெற்றிடும் என்பது ஐதீகமாகும். இது குறித்த பல்வேறு சுவராஸ்யமான தகவல்களை இப்போது பார்ப்போம்...

அரிசி மாவுக் கோலம்: பனியும், குளிரும் ஒருமித்து வாசம் பண்ணும் மார்கழி மாதம் புனிதமான மாதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில்தான் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசல்களில் கோலமிட்டு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருப்பினும் மார்கழி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது வீட்டுவாசல்களில் விதவிதமாக போடப்பட்டிருக்கும் கோலங்கள்தான். இந்த கோலங்களில் பல்வேறு வகைகள் இருப்பினும் அரிசிமாவினைக் கொண்டு போடப்படும் அரிசிமாவுக் கோலம்தான் சாலச்சிறந்தது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீவராசிகளுக்கு உணவு: அரிசிமாவினைக் கொண்டு இடப்படும் கோலமே தமிழர்களின் மரபுவழிக் கோலமாகும். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் சுண்ணாம்பு கற்பொடி மற்றும் பல்வேறு வண்ண துகள்களைக் கொண்டு உருவாக்கப்படும் கோலங்களே வீட்டுவாசல்களை அலங்கரித்து வருகிறது. காலம் காலமாக தமிழர்கள் கடைபிடித்து வந்த அரிசிமாவுக்போலம் தற்போது முற்றிலும் மறைந்து போய்விட்டது என்றே கூறலாம். ஆனால் அரிசி மாவினைக் கொண்டு வீட்டுமுன் மாக்கோலம் போட்டால் அதை கணக்கற்ற எறும்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உணவாகக் கொண்டு பசியாறுகின்றன என்பதுதான் உண்மை.

காலையில் எழுந்தவுடன் மாக்கோலம் போடுவது முதல்வேலையாக ஜீவராசிகளுக்கு உணவு தந்து ஆதரிக்கும் செயலாக உள்ளது. அதே போல் பண்டிகை காலங்களில் அரிசிமாவை நீர்கலந்து துணியில் கட்டி பிழிந்து வீடுகளுக்குள் போடப்படும் கோலம் இழைக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.

பாவம் சேர்க்கும் சுண்ணாம்பு கோலம்: மார்கழி மாதம் தொடங்கியதும் வீட்டுமுன் அரிசிமாவைக் கொண்டு மாக்கோலம் போட்டால் மகாலட்சுமி அந்த வீட்டில் வாசம் செய்வது நிச்சயம். அதே போல் மாக்கோலத்தை எறும்புகள் உண்பதால் அது அன்னதானம் போட்டதற்கு சமமானதாகவும் ஏழு தலைமுறைக்கு வீட்டிலுள்ள தானியங்கள் வற்றாது நிலைத்திடும் என்று கூறப்படுகிறது. இந்தகைய பயன்மிகு மாக்கோலம் இருக்கையில் நவீனம், நாகரீகம் என்ற பெயரில் தற்போது போடப்படும் சுண்ணாம்புப்பொடி மற்றும் வண்ணத்து கோலங்கள் ஜீவராசிகளுக்கு உணவளிப்பதை தடுத்து பாவங்களை சேர்ப்பதாகவே உள்ளது.இது போன்ற நவீனகால கோலங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பினும் அதனால் எந்தவித பலாபலன்களும் இல்லை.

கோலம் போடும் முறைகள்:  கோலம் போடுவதற்கென சில வரைமுறைகளும் உள்ளன. அதில் அரிசிமாக்கோலத்தின் நடுவே சாணஉருண்டையில் செம்பருத்தி அல்லது பூசணிப்பூவினை வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும். இடதுகையால் கோலமிடுவது நல்லதல்ல. கோலம் போடும் போது பென்கள் குனிந்து நின்று கோலம் போடவேண்டும். உட்கார்ந்து கொண்டு கோலம் போட்டால் வீட்டிலுள்ள செல்வங்கள் குறைந்துவிடும்.

ஆண்கள் கோலம் போடக்கூடாது: ஆண்கள் கோலம் போடுவது கூடாது. வீட்டில் உள்ள வேலைக்காரர்களை கொண்டு கோலம் போடச் செய்வது குழப்பத்தை உண்டாக்கும். எனவே உலகின் மூத்தகுடி மக்களான தமிழர்களின் மரபுவழி மாண்புகளை காற்றிலே பறக்க விட்டுவிடாமல் காப்பாற்றிடும் வகையில் வீட்டு வாசல்களில் அரிசிமாவு கொண்டு மாக்கோலமிட்டு எண்ணற்ற ஜீவராசிகளுக்கு வாழ்வளிப்போம் - பாரம்பரியத்தை பாதுகாப்போம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago