எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் விளங்குகின்றது. இங்கு பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய எம்பெருமான்கள் இத்திருக்கோயிலில் உள்ள பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்கள். இத்திருக் கோவிலில் மூலவர் அருள்மிகு வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக சேவை தருகிறார்.
இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வரும் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. க்யூ வரிசை விபரங்களை சேவார்த்திகள் அறிய திருக்கோயிலினுள் செல்லும் வழிகள், திருக்கோயிலிலிருந்து வெளியேறும் வழிகள் ஆகிய விபரங்கள் அடங்கிய வரைபடம் தென்மாட வீதியில் அமைந்துள்ள திருக்கோயில் நூலகத்தின் அருகில் வைக்கப்படும்.
திருக்கோயிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பரமபதவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை சேவார்த்திகள் கண்டு களிக்கும் வண்ணம், அகண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியின் மூலம் அனைத்து சுகாதாரப் பணிகளும், அவசர உதவிக்காக சிறப்பு மரத்துவக் குழுக்களும் செயல்படும். சேவார்த்திகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். சேவார்த்திகளின் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் மற்றும் தென்னக ரயில்வே மூலம் சிறப்பு ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும். சேவார்த்திகளின் பாதுகாப்புக்காக நான்கு மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படும். திருக்கோயில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.
சேவார்த்திகள் முறை வரிசையில் செல்ல புதியதாக ஸ்டெயின்லேஸ் ஸ்டீல் கம்பிகளால் வரிசைகள் கூடுதலாக அமைக்கப்படும். திருக்கோயில் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதியில் மின் அலங்காரம் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட உள்ளது. திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கவும், கீதை சுலோகம், சாராம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகம் திருக்கோயில் வளாகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
திருக்கோயிலுக்கு வருகின்ற சேவார்த்திகளுக்கு திருக்கோயில் மூலமாக திருக்கோயிலின் வரலாறு அடங்கிய சிற்றட்டை அருள்மிகு ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு ஆகியவை வழங்கப்பட உள்ளது.
மேற்கண்டவாறு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முனைவர் மா.வீரசண்முகமணி அவர்கள், இத்திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர், துணை ஆணையர்/செயல் அலுவலர் த.காவேரி, துறை அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வரும் ஜனவரி 8-ம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நிரல்.
அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் முத்தங்கி சேவை
(ரூ.300/- டிக்கட் மற்றும் பேட்ஜ் உள்ளோர் திருக்கோயிலினுள் மேற்கு கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுதல். அதிகாலை 2.30 –அதிகாலை 2.45 மணிவரை உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம். அதிகாலை2.45 – 4.00மணி மகா மண்டபத்தில் உற்சவர் வைர அங்கி சேவை. அதிகாலை 4.00 மணி உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்திலிருந்து உள்புறப்பாடு துவங்குதல். அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு - நம்மாழ்வாருக்கு காட்சி தருதல். அதிகாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை, வேத திவ்யப்பிரபந்தம் துவங்குதல். அதிகாலை5 – 5.10மணி வரை பரமபத வாசலில் உபயதாரர் மரியாதை மற்றும் தரிசனம். அதிகாலை 5.10 மணி முதல் 5.45 மணி வரை திருவாய்மொழி மண்டபத்தில் 3 சுற்றுக்கள் உற்சவர் பத்தி உலா நடைபெற்று திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளி சேவை சாதித்தல்.
அதிகாலை 5.45 மணி திருவாய்மொழி மண்டபத்தில் சேவார்த்திகள் உற்சவரை சேவித்து விட்டு வெளி வருதல். காலை 6.00 மணி முதல் நள்ளிரவு வரை சேவார்த்திகள் சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.100/- பின்கோபுர வாசல் வழியாகவும் மற்றும் கட்டணமின்றி பொது தரிசனம் முன் கோபுர வாசல் வழியாகச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மேற்கு கோபுர வாயில் வழியாக கட்டணமின்றி பரமபதவாசலைக் கடந்து உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் சேவித்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 10.00 மணிக்கு உற்சவர் அலங்கார திருமஞ்சனம் இரவு 12.00 மணிக்கு நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதியில் திருவீதி உலா. 09.01.2017 முதல் 16.01.2017 முடிய மாலை 5.45மணிக்கும், 11.01.2017 காலை 10.00 மணி மற்றும் 17.01.2017 காலை 9.30 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.