முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோழவரம் ஒன்றியம் மல்லியங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      திருவள்ளூர்
Image Unavailable

பொன்னேரி : திருவள்ளுர் மாவட்டம் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றது. சோழவரம் ஊராட்சி ஒன்றியம், மல்லியங்;குப்பம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம், தூய்மைப் பணி ஆகியவற்றை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி கண்காணிப்பு அலுவலர் திருமதி.அமுதவல்லி, இ.ஆ.ப., திருவள்ளுர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. பின்னர், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில் "திருவள்ளுர் மாவட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க 14.12.2016 முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் 46 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்முகாமின் மூலம் இதுவரை 38,900 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 344 செவிலியர் பயிற்சி மாணவர்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் 56 குழுக்கள் மூலம் 492 நீர்நிலைகளில் குளோரின் கலக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த 19 புகைத்தெளிப்பு குழுக்கள் மூலம் 106 தொகுதிகளில் புகைத்தெளிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகள் முழுமையாக சுத்தம் செய்யும் பணி 5 நாட்கள் (19.12.2016 முதல் 23.12.2016 வரை) நடைபெற்று வருகிறது. இன்று மல்லியக்குப்பம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதன்மூலம் 1,056 பொதுமக்கள் பயன்பெறுகிறார்கள். இதில் நிலவேம்பு குடீநீர், உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று கால்நடைகளுக்கு தனியாக மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். முகாமில் கால்நடைகளுக்கு தொண்டை அடைப்பான் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து, கோழிகழிச்சல் தடுப்பூசி, கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் சினைப்பரிசோதனை, பால் உற்பத்தியை அதிகரிக்க தாது உப்பு கலவை, பசுந்தீவனங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இம்முகாமில் இவ் ஊராட்சியில் உள்ள 350 கால்நடைகள் பயன்பெறும். இந்த ஊராட்சியில் முழுமையான சுகாதாரம் செய்யும் பணி அனைத்து தெருக்களிலும், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கொசு மருந்து அளித்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் ஏற்றம் செய்து, குளோரினேற்றம் செய்யப்படுகிறது. குளோரின் அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பணிகளில் சுமார் 60 தூய்மைக் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று கூறினார். இம்முகாமில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்; திரு.பி.பலராமன், முன்னாள் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பெறுந்தலைவர் கார்மேகம்;,முன்னாள் ஆரணி பேருராட்சி தலைவர் தயாளன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்