எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்ற தொடக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் .வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ,ப., முன்னிலையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தினை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் ரூ.68 லட்சம் செலவில் ஒரு நீதிபதி உட்பட 16 பணியாளர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில பாளையங்கோட்டையில், 25 நீதிமன்றங்களும் தென்காசி, 5 நீதிமன்றங்களும் அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 4 நீதிமன்றங்களும் உட்பட மொத்தம் 47 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 47 நீதிமன்றங்களில் 44 நீதி மன்றங்கள் சொந்த அல்லது அரசு கட்டிடங்களில் இயங்கி வருகிறது. நீதித்துறை சுதந்திரமாகவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் புரட்சித்தலைவி அம்மா நீதி நிர்வாகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
புரட்சித் தலைவி அம்மா கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 223 புதிய நீதிமன்றங்களை உருவாக்கிட உத்தரவிட்டதுடன் இதற்க்கு ரூ.58.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 9 நீதிமன்றங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 2016 – 17ம் ஆண்டில் உளுந்தூர் பேட்டை, காங்கேயம் மற்றும் ஆலந்தூரில் தலா ஒரு சார்பு நீதிமன்றம் ரூ.2.94 கோடியில் அமைப்பதற்க்கும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ரூ.8.69 கோடியில் கூடுதலாக மூன்று தளங்கள் அமைக்கவும், சாத்தான்குளத்தில் ரூ.5.55 கோடியில் நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள் அமைப்பதற்கும், திருவள்ளுரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.23.50 கோடியில் கட்டுவதற்கும், திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ரூ.33.75 கோடியில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு தேவையான ஊஊவுஏ கேமாரக்கள் கம்பியூட்டர்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க ரூ.45.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அம்மா அவர்களால் புதிய பல சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 25 குடும்பநல நீதிமன்றங்கள் ஒப்பளிக்கப்பட்டு 20 நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது திருநெல்வேலியிலும் ஒரு நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 32 நீதிமன்றங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இதில் 22 நீதிமன்றங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டது. பெண்கற்பழிப்பு, கொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு 08.01.2013 அன்று மகளிர் நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டது.
அதற்கு முன்பாகவே அம்மா 1.1.2013 அன்று தமிழகத்தில் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டார்கள். தேங்கி கிடக்கும் சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலுர் மாவட்டம் தவிர 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இது போல மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் 32 தமிழகத்தில் உள்ளது.
மத்திய அரசு நிதியுதவி அளிக்க இயலாது என தெரிவித்த 49 விரைவு நீதிமன்றங்களையும் மாவட்ட நீதிமன்ற தகுதிக்கு தரம் உயர்த்தி நிரந்தர நீதிமன்றங்களாக அம்மா உத்தரவிட்டார்கள். நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதி குடியிருப்புகள் அமைப்பது போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.511.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.93 கோடி மட்டுமே மத்திய அரசின் பங்காகும். 2014 ம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில் 15,08,767 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.915.07 கோடி தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.70 கோடி செலவில் அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. வழக்குறைஞர்களின் நலன் கருதி சேமநல நிதியை உயர்த்தி வழங்கியது. 5 ஆண்டுகளில் 213 அரசு உதவி வழக்கு நடத்துனர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது உள்ளிட்ட பல திட்டங்களை அம்மா செயல்படுத்தியுள்ளார்கள். ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்து முன்மொழிவு அனுப்பப்பட்டதும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றம் துவக்கப்பட்டுள்ளதால் ஆலங்குளம் பகுதி பொது மக்களின் நிலுவையிலுள்ள வழக்குகள் விரைந்து நிவாரணம் பெற இயலும் - எனப் பேசினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:-
அம்மா துறை தோறும் புதுமைகளையும் வித்தியாசமான திட்டங்களையும் தினந்தோறும் செய்வதையே தனது லட்சிய நோக்கமாக கொண்டவர். தமிழகத்தில் சட்டத்துறையில் நல்ல பல திட்டங்களை சீரிய முறையில் செய்து வந்தவர்கள் அம்மா அவர்களின் ஆட்சியில் தான் சென்னை உயர்நீதி மன்றத்தினுடைய நீதிபதி சட்டமன்றத்தில் நடைபெற்ற பெருமை வாய்ந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெறச் செய்த பெருமை அம்மா அவர்களையே சாரும். ஆலங்குளம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு நிலுவைகளில் உள்ள பொது மக்கள் விரைவில் நிவாரணம் பெறுவார்கள் எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையாபண்டியன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன்,இ.கா.ப., தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் ராஜமாணிக்கம், ஆலங்குளம் நீதிமன்ற நடுவர் பிச்சைராஜன், ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சுதாபரமசிவன்,பரணிசங்கரலிங்கம்,இ.நடராஜன்,சண்முக சுந்தரம், திருநெல்வேலி மாவட்ட அரசு வழக்கறிஞர் சிவலிங்கமுத்து, ஆவின் சேர்மன் ரமேஷ், கண்ணன், எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம், சேர்மபாண்டி, பாண்டியராஜ், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.