முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைச் கூட்டம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரர் அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைச் கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் ஸ்ரீபெருமந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் கே.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தில் புரட்சி தலைவி அம்மாவின் நல்லாசியோடு கழகத்தை கட்டிகாக்க சின்னம்மாவை கழகத்தின் பொது செயலாளராக தலைமையேற்று நடத்திட ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம்ஜீவானந்தம், வேலியூர்தனசேகரன், தென்னேரிவரதராஜீலு, காஞ்சி பன்னீர் செல்வம், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம், மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின் நகர அம்மா பேரவைச் செயலாளர் சுப்பரமணியன், க.சு.மோகன், மகளிரணி நிர்வாகி வரலட்சுமி, அஜிஜாமா, திலகவதி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்