எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக உருவாக்கிட அரசு மானிய நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிட திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் சிறப்பு செய்தியாளர் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொந்தளம் ஊராட்சி, பி.மேட்டூர் பகுதியில் பாவாயி குப்புசாமி, குப்பம்மாள் அங்கமுத்து, மீனாட்சி முத்துசாமி உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும், வடகரையாத்தூர் ஊராட்சியில் பாப்பாத்தி ராமசாமி, வெண்ணிலா செல்வம், காமாட்சி இராமசாமி, கிருஷ்ணவேணி பெரியசாமி உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும், இருக்கூர் ஊராட்சியில் ரவி பெரியசாமி, ராஜு, சுரேஷ் உட்பட பல்வேறு பயனாளிகள் ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் கட்டியுள்ள தனிநபர் கழிப்பிடங்களையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழகத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டங்களாக உருவாக்கிடும் பொருட்டு முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு தேர்வு செய்து தூய்மை பாரத திட்டத்தின் மூலம் இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள உள்ள 322 ஊராட்சிகளையும் உருவாக்கிட திட்டமிடப்பட்டு மாவட்டம் முழுவதும் அதற்கான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களிடையே தனிநபர் கழிப்பிடம் திட்டம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இல்லங்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றில் தனிநபர் கழிப்பிடங்கள் இல்லாத வீடுகளுக்கு ரூ.12,000 மானிய நிதியுதவியுடன் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் தமிழகத்தில் சிறப்பான சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை முற்றிலும் ஒழித்து, அனைவரும் கழிப்பறையை கட்டி பயன்படுத்த தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட ரூ.12000- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தினை 2016-17 ஆம் ஆண்டில், தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்டத்தின் கீழ் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக உருவாக்கிடும் நோக்கத்தில் கழிப்பிடங்கள் கட்டிப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் 2015-16 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக (2.10.2015-ல் 61 கிராம ஊராட்சிகளும், 26.01.2016-ல் 46 கிராம ஊராட்சிகளும் ஆக) 107 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத கிராமங்களாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்பொழுது, 2016-17 ஆம் ஆண்டிற்கு, மீதமுள்ள 215 கிராம ஊராட்சிகளில், 15.08.2016-ல் 10 கிராம ஊராட்சிகளும், 21.11.2016-ல் 20 கிராம ஊராட்சிகளிலும் மொத்தம் 30 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 31.03.2017க்குள் எஞ்சியுள்ள 185 கிராம ஊராட்சிகளிலும் 100மூ கழிப்பிடங்கள் கட்டி முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு, திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கிட அனைத்து பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென, கடந்த 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுகளில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் ரூ.12,000 மானிய நிதயுதவி வீதம் 13,922 தனி நபர் இல்லக்கழிப்பிடங்களுக்கு ரூ.16.71 கோடி நிதியுதவியும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 27,872 கழிப்பிடங்களுக்கு ரூ.33.45 கோடி நிதியுதவியும் என மொத்தம் 41,794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட ரூ.50.16 கோடி அரசு ஊக்கத்தொகையாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு 41,794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.